மதுரையை தேர்வு செய்த அமித்ஷா… டார்கெட் அமைச்சர் மூர்த்தி… தரமான சம்பவம் இருக்கு…..

0
Follow on Google News

2025ம் வருடம் தொடங்கியது முதல் திமுக அமைச்சர்களை குறி வைத்து அமலாக்க துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள், அந்த வரிசையில் அமைச்சர் துரைமுருகன், செந்தில்பாலாஜி , கே என் நேரு என ஒரு பக்கம் தொடர்ந்தாலும் அடுத்து பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி தான் என ஒவ்வொரு முறையும் அமலாக்க துறை சோதனையின் போது பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இதுவரை அமைச்சர் மூர்த்தியிடம் அமலாக்க துறை நெருங்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களுக்கு எதிராக பாஜக மிக தீவிரமாக அரசியல் செய்து வந்தாலும், பல்வேறு விமர்சனகளுக்குள் உள்ளன அமைச்சர் மூர்த்திக்கு எதிராக சொல்லுபடியாக திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எந்த ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம், ஏன் எதிர்த்து பேட்டி கூட மதுரையில் பாஜக அரசியல் செய்யாமல் இருந்து வருவது, மதுரையில் அமைச்சர் மூர்த்தியிடம் அட்ஜஸ்ட்மென்ட் பாலிடிக்ஸ் செய்கிறதா என்கிற விமர்சனமும் எழுந்து வந்தது.

இப்படி ஒரு சூழலில் அமைச்சர் மூர்த்தி மாவட்ட செயலாளராக இருக்கும் மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக தேசிய சிந்தனை கொண்ட அணைத்து சமூக தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் வேலையாக தேசிய சிந்தனையாளர் சந்திப்பு கூட்டம் மதுரை பாஜகவின் முக்கிய தலைவர் ராஜா ரவிபாலா தலைமையில் நடைபெற்றது.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் மதுரையில் திமுகவை வீழ்த்த தேசிய சிந்தனை கொண்ட அணைத்து சமுதாய தலைவர்களும் கை கோர்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்ட திமுகவின் மிக பிரமாண்ட பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அமைச்சர் மூர்த்தியின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.

இந்நிலையில் திமுக சார்பில் நடைபெற்ற மிக பிரமாண்ட பொது கூட்டம் முடித்து ஓரிரு நாட்களே முடிந்த நிலையில், தற்பொழுது வரும் ஜூன் 8ம் தேதி மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்சா மதுரை ஒதுக்கடையில் பாஜக சார்பில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வந்து சென்ற ஓரிரு நாட்களில் திமுகவை குறிவைத்து அமலாக்க துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அப்படி தான் கடந்த முறை அமித்ஷா கோவை வந்து சென்ற பின்பு டாஸ்மாக் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்நிலையில் தற்பொழுது மதுரை வரும் அமித்ஷா மேடையில் திமுகவுக்கு எதிராக சில விஷயங்களை பேச இருப்பதாகவும், அதில் குறிப்பாக அமித்ஷாவின் பேச்சில் திமுக ஊழல் குறித்தான பேச்சு முக்கியத்துவம் பெரும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

மேலும் அமித்ஷா கைவசம் இருக்கும் திமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலில் அமைச்சர் மூர்த்தி பெயரும் இடம் பெற்றிருக்கிறது என தெரிவிக்கும் டெல்லி வட்டாரங்கள், தமிழ்கத்தில் நடக்கும் அமலாக்க துறை சோதனை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் நடந்து வருகிறது என தெரிவிக்கும் டெல்லி வட்டாரங்கள், அமித்சா மதுரை பயணத்துக்கு பின்பு , மதுரையை சேர்ந்த அமைச்சர் மூர்த்தி தான் அமலாக்க துறையின் அடுத்த டார்கெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் மதுரையில் நடந்த மிக பிரமாண்ட பொது கூட்டம் குறித்த உளவு துறை ரிப்போர்ட் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா கவனத்துக்கு சென்றதாகவும், அதில் அமைச்சர் மூர்த்தி குறித்து பால தகவலும் இடம்பெற்றதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here