இரண்டாவது மனைவிக்கு மதுரை முத்துவுக்கு என்ன பிரச்சனை.? வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் சோகமான வாழ்க்கை..

0
Follow on Google News

கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் வயிறுவலிக்க சிரிக்க வைத்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் மதுரை முத்து. ஸ்டாண்ட் அப் காமெடியில் கில்லாடியான மதுரை முத்து காலத்துக்கு ஏற்றார் போல் தன்னை அப்கிரேட் செய்து கொண்டு அவர் அடிக்கும் புராபர்டி காமெடிகள் தற்பொழுது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சின்னத்திரை மட்டுமின்றி வெளிநாட்டு நிகழ்ச்சி என செம்ம பிசியாக இருந்து வருகிறார் மதுரை முத்து.

இந்நிலையில் இவருக்கும் லோகா என்கிற பெண்ணுடன் திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தை இருந்து வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மதுரை முத்து கலைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அமெரிக்க சென்ற நிலையில், இவர் மனைவி லோகா மதுரையில் இருந்து காலை பிள்ளையார்பட்டி செல்வதற்காக காரில் புறப்பட்டார். டிரைவர் கண்ணன் காரை ஓட்டினார்.

அப்போது திருப்பத்தூர் கோட்டையிருப்பு பகுதி அருகே கார் சென்றபோது காரின் இடது புற டயர் வெடித்ததால், கார் கட்டுப்பாட்டிலிருந்து விலகி புளிய மரத்தில் மோதியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லோகா இறந்தார். டிரைவர் கண்ணன் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். மதுரை முத்துவின் மனைவி லோக விபத்தில் இறக்கும் போது அவரது மனைவி லோகோவுக்கு வயது 32.

இந்நிலையில் மனைவி 2016 பிப்ரவரி மாதம் விபத்தில் இறந்த அடுத்த ஆறு மாதத்தில் மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்தது கொண்டதாக தகவலும், ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் தீயாக பரவியது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், மனைவி மறைந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் இரண்டாவது திருமணமா.? என மதுரை முத்துவை திட்டி தீர்த்தனர்.

இரண்டாவது திருமணம் குறித்து வந்த கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத மதுரை முத்து, அந்த திருமண காட்சி உண்மையானது இல்லை, இது ஒரு குறும்படத்திற்காக எடுக்கப்பட்டது என மதுரை முத்து அப்போது விளக்கம் அளித்தார். ஆனால் முத்து விளக்கம் கொடுத்தது உண்மை இல்லை, அவர் உண்மையிலே மனைவி இறந்து அடுத்த 6 மாதத்திற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்பது பின்பு தெரியவந்தது.

பின்பு தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து பேசிய மதுரை முத்து. தனக்கு இரண்டு பெண் குழந்தைகளும் வயதான பெற்றோரும் இருப்பதாகவும், அவர்களை நல்ல படியாக பார்த்துக் கொள்வதற்கு ஒரு துணை வேண்டும், அதன் காரணமாகத் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த போது அவர்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக மதுரை முத்து, முதல் மனைவியின் தோழியும் டாக்டருமான ரீத்து என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் முத்துவின் இரண்டாம் மனைவி ரீத்து சமூக வலைத்தளங்களில் பிஸியாக இயங்கி வரக்கூடியவர். அடிக்கடி ரீல்ஸ் வீடியோ போடும் ரித்து சமீபகாலமாக சோகமாக வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

எனக்கு என ஒரு உயிர் வேண்டும். என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காக நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்கவும் வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறை நான் ஏமாந்து போய்க் கொண்டே இருப்பதாக வீடியோவில் அழுதபடி முத்துவின் இரண்டாவது மனைவி ரீத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் மதுரை முத்துவுக்கு அவரது இரண்டாவது மனைவி ரீத்துவுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மதுரை முத்துவுக்கு அவரது இரண்டாவது மனைவி ரீத்துவுக்கு ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.