விஜய் டிவி நீயா நானாவில் நடந்த அதிசயம்…குழந்தை இல்லாத தாம்பத்தினருக்கு பிறந்து குழந்தை…

0
Follow on Google News

விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் இரு தரப்பினர் விவாதம் செய்வது வழக்கம். விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் தலைப்புகளும், கோபிநாத்தின் அனல் தெறிக்கும் பேச்சுக்களுமே நீயா நானாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கூறலாம். குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று துணிச்சலாக கருத்துக்களை முன் வைக்கும் பங்கேற்பாளர்களும் அவ்வப்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது உண்டு.

அப்படி ஏராளமான பங்கேற்பாளர்கள் நீயா நானா நிகழ்ச்சிக்கு பின்னர் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தைத்தனம் மாறாத மனைவிகளும் அவர்களால் அவதிப்படும் கணவன்மார்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் ஜெயசித்ரா யுவராஜ் தம்பதியினர் பங்கேற்று இருந்தனர்.

அப்போது யுவராஜ், தன்னுடைய மனைவி தன்னை எப்போதும் குழந்தை போல் நடத்துவதாகவும், வெளியே ஹோட்டலுக்கு சென்றால் கூட உங்களுக்கு நான் தான் சாப்பாடு ஊட்டி விடுவேன் என்று கூறுவதாகவும் கோபிநாத்திடம் புகார் செய்தார். அதற்கு அவருடைய மனைவி ஜெயசித்ரா, “எங்களுக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடம் ஆகிவிட்டது எங்களுக்கு குழந்தை கிடையாது. அதனால என் கணவர் தான் எனக்கு குழந்தை மாதிரி. அவர குழந்தையா பாத்துக்கணும் நினைக்கிறதல்ல என்ன தப்பு இருக்கு” என்று வெளிப்படையாக சொல்லி இருப்பார்.

ஜெயசித்ராவின் பதிலைக் கேட்டு அசந்து போன கோபிநாத், “இப்படிப்பட்ட மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் அவங்க உங்களை கணவராக மட்டும் இல்லாமல் குழந்தையாகவும் பார்த்துக்கிறாங்க” என்று சொல்லி பாராட்டி இருப்பார். இது பழைய எபிசோடாக இருந்தாலும், சமீப காலமாக இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் என்று பலரும் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்து வந்தனர். இப்படியான நிலையில் இந்த தம்பதியினர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தனர். அதில் நீயா நானா நிகழ்ச்சிக்குப் பிறகு தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், குழந்தை இல்லாமல் நாங்கள் பட்ட கஷ்டத்தை வேற யாரும் படக்கூடாது என்றும் அவர்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.

அந்த பேட்டியில் பேசிய ஜெயசித்ரா, “தயவு செய்து கல்யாணம் முடிந்ததும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு அதை தள்ளி போடுங்கள். ஆனால் இருக்கும்போதே இப்போது குழந்தை வேண்டாம் என்று தள்ளி போடாதீர்கள். பிறகு கிடைக்குமா கிடைக்காதா என்று ஏங்க வேண்டி இருக்கும் என்று கண் கலங்கிய படியே பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய ஜெயசித்ரா, நாங்கள் பல வருடமாக குழந்தை இல்லாமல் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் விசேஷத்திற்கும் போக முடியாது. எங்கு போனாலும் குழந்தை எங்கே என்ற கேள்வி தான் கேட்பார்கள்.நாங்கள் ஏழு வருடமாக குழந்தை இல்லாமல் நரக வேதனையை அனுபவித்தோம் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய யுவராஜ், எங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலை ஆரம்பத்தில் எனக்கு அதிகமாகவே இருந்தது. அதன் வெளிப்பாடுதான் நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது கூட. ஆனால் என் குழந்தையை முதல்முறையாக நான் கையில் வாங்கிய பொழுது நான் பட்ட அவமானங்கள் கஷ்டங்கள் அத்தனையும் காற்றோடு காற்றாய் கரைந்து விட்டன. குழந்தை பிறந்த பிறகு எங்களது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

எனக்கும் என் மனைவிக்கும் இடையே அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருகிறது என்றால் அது என் குழந்தையை வைத்தது தான் இருக்கும். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார். தம்பதியினர் அளித்த இந்த பேட்டி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.