என் மனைவியை வெச்சுக்க.. சொத்தை குடு… சொத்துக்காக குணசேகரன் செய்யும் மோசமான செயல்..

0
Follow on Google News

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப் கியரில் ஓடிக் கொண்டிருப்பது என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். தினமும் புதிய புதிய திருப்பங்களை வைத்து பார்வையாளர்களே தன் பக்கம் ஈர்த்து வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக இருந்தாலும் அனைவரையும் கவர்ந்தது என்றால் அது குணசேகரன் தான். தன்னுடைய அப்பதாவின் சொத்தை அபகரிப்பதற்காக குணசேகர செய்யாத சூழ்ச்சி எதுவுமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு பல சூழ்ச்சிகளை செய்தவர் குணசேகரன்.

தங்கையின் வாழ்க்கையை பணயம் வைத்து கூட சொத்தை அபகரிக்க வேண்டும் என்று குணசேகரன் திட்டமிட்டு வந்தார். இந்நிலையில் அப்பத்தாவின் 40% சொத்துக்கள் ஜீவானந்தம் கைக்கு சென்றுவிட்ட நிலையில் இதனை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தனக்கு பக்கவாதம் வந்தது போல் நடித்துக் குடும்பத்தை ஏமாற்றுகிறார். தன் உடன் பிறந்த தம்பிகளுக்கு கூட இந்த விஷயத்தை தெரியாமல் ஏமாற்றி வருகிறார்.

வீட்டில் இருக்கும் பெண்கள் ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை மீட்க போராடி வரும் நிலையில், ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரியின் சந்திப்பு ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜீவானந்தம் ஈஸ்வரி காதல் கதையினை கூறியதுடன், ஈஸ்வரி அவரின் பெயரைக் கூட தெரிந்து கொள்ளாமல் காதலித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஜீவானந்தம் ஈஸ்வரியை காதல் செய்துள்ளார். ஈஸ்வரியின் வீட்டிற்கே சென்று பெண்ணும் கேட்டுள்ளார்.

ஆனால் ஈஸ்வரியின் அப்பா மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி சொத்துக்கள் நிறைய உள்ள வயதுக் கூடியவரான குணசேகரணக்கு ஈஸ்வரியை திருமணமும் செய்துள்ளார். தற்போது இந்த விஷயம் இதுவரை ரகசியமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரி – ஜீவானந்தம் பழைய காதல் விஷயம் குணசேகரனுக்கு தெரிய வந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதுதான் எதிர்நீச்சல் சீரியலின் புதிய திருப்பம்.

இந்நிலையில் கிரி படத்தில் அக்காவை வைத்து பேக்கரி டீலிங் காமெடி காட்சிகளில் வருவது போன்று, ஜீவானந்தனிடம் தனது மனைவியை வைத்து விட்டு தனக்கு அனைத்து சொத்துக்களையும் கொடுக்குமாறு குணசேகரன் கூறவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் குணசேகரனுக்கு சொத்து தான் எப்போதும் முதலிடம். அதற்குப் பிறகுதான் குடும்ப குட்டி எல்லாம்.

இன்னொரு பக்கம் ஆதி குணசேகரன் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் அம்மா விசாலாட்சி முழு சப்போர்ட் செய்து வருகிறார். ஆனால் தற்போது குணசேகரன் நடித்து வருவது விசாலாட்சிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் குணசேகரன் மீது விசாலாட்சி கோபத்தில் இருக்கிறார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜனனியின் கணவர் சக்தி திடீரென படுத்த படுக்கையாக முடங்கிப் போகிறார்.

அதாவது சக்திக்கு அம்மை போட்டுள்ளது. இதன் மூலம் ஜனனி தனியாக இனி சக்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள இருக்கிறார். இதுவரை நண்பர்களாக தான் ஜனனி மற்றும் சக்தி இருவரும் பழகி வருகிறார்கள். இந்நிலையில் ஜனனி, சக்தி மீது காட்டும் அக்கறை இவர்களை கணவன் மனைவியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் ஈஸ்வரி மற்றும் ரேணுகா தங்களது தனி தொழிலை தொடங்கியுள்ளார்கள். இப்போது சமையலில் ஆர்வம் உள்ள நந்தினிக்கு கேட்டரிங் தொழிலுக்கான லைசன்ஸை ஜனனி வாங்கி விட்டார். அதுவும் நந்தினியின் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாக ஜனனி இந்த லைசன்ஸை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த இந்த பெண்மணிகள், தற்போது தான் எதிர்நீச்சல் சீரியலில் முன்னேற ஆரம்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.