கோபியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய பாக்கியா.. வெளியானது பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தது என்ன.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. மனைவிக்கு எதுவுமே தெரியாது, அதனால் சமையல் மற்றும் வீட்டு வேலையை தவிர வேறு எந்த ஒரு விவகாரத்திலும் தலையிட கூடாது என மனைவியை அடக்கி வைக்கும் கணவரான கோபி. இரண்டு மகன் ஒரு மகள், வயதான அப்பா அம்மா, முதல் மகனுக்கு திருமணம் முடிந்து மருமகள் என கூட்டு குடும்பத்தை நிர்வாகம் செய்யும் மனைவியாக பாக்கியலட்சுமி.

கணவருக்கு தன்னை பிடிக்கவில்லை என்றாலும், கணவனுக்கு தேவையான அனைத்தையும் ஒரு வித பயத்துடன் செய்கிறார். கணவனுக்கு பிடிக்காத எதையும் செய்வதில்லை. பல கஸ்டமான சூழலில் எப்படி குடும்பத்தை வழிநடாத்துகிறாள் பாக்கியலட்சுமி என்பது பல குடும்ப தலைவிகளுக்கு முன் உதாரனமாக இருக்கிறார் பாக்கியலட்சுமி, வயதான மாமனார், மாமியாரை மகள் போல் மிக கனிவாக பார்த்து கொள்கிறார் பாக்யா.

கோபி மனைவிக்கு தெரியாமல் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தான ராதிகா உடன் கள்ள தொடர்பில் இருக்கிறார். இந்த கள்ள தொடர்பு கோபி தந்தைக்கு தெரியவருகிறார், அதன் பின்பு இரண்டாவது மகன் எழிலுக்கு தெரியவருகிறது. இருந்தும் பாக்யாவுக்கு தெரிந்தால் மனது வேதனையடையும் என்பதால் கோபியின் கள்ள தொடர்பை மறைந்து வருகின்றனர், இருந்தும் கோபி நடவடிக்கைகள் மீது பாக்யாவுக்கு சதேகம் வருகிறது.

ஒரு கட்டத்தில் கோபிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமணையில் இருக்கிறார் என்கிற தகவல் பாக்யாவுக்கு தகவல் வர, மருத்துவமனை விரைகிறார் பாக்யா, அங்கே சென்று பார்க்கையில் கள்ள காதலி ராதிகாவுடன் நெருக்கமாக கையை பற்றி கொண்டு மனம் விட்டு கோபி பேசுவதை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகும் பாக்யா ஏதும் பேசாமல் அமைதியாக வீடு திரும்புகிறார் பாக்யா. பின்பு மருத்துவமனையில் இருந்து கோபி வீடு திரும்பியதும் வீட்டின் உள்ளே விடாமல் தடுக்கிறார் பாக்யா.

குடும்பத்தினர் அனைவரும் பாக்யா ஏன் கோபியை தடுக்கிறார் என குழப்பத்தில் கேள்வி எழுப்ப மருத்துவமனையில் நடந்ததை புட்டு புட்டு வைக்கிறார் பாக்யா. எந்த ஒரு பதிலும் சொல்லமால் திகைத்து நிற்கிறார் கோபி, ஆனால் கோபி அம்மா பாக்யா சொல்வதை நம்ப மறுக்கிறார், அதற்கு எழில் மற்றும் கோபி அப்பா இருவரும் பாக்யா சொல்வது உண்மை தான், இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என கோபி செய்து வரும் தவறை அம்பலப்படுத்துவது வரை இதுவரை ஒளிபரப்பாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் பாக்யா பின்னால் ஒரு அணியாக திரள்கின்றனர், மாமனார், மாமியாரை நான் பார்த்து கொள்கிறேன், இனி உங்களுக்கு இந்த குடும்பத்தில் இடமில்லை என பாக்யா தெரிவித்து, இனி இந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வீட்டை விட்டு கோபியை வெளியே தள்ளிவிடுக்கிறார், என பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்து என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?