ரசிகர்களுக்கு அல்வா… மகளுக்கு 150 கோடியில் பிரமாண்ட வீடு..ரஜினியின் அரசியில் அறிவிப்பு பின்னணி என்ன.? திருந்துவார்களா ரசிகர்கள்.?

0
Follow on Google News

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, இதன் பின்பு உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சென்று நலமுடன் திரும்பினார் ரஜினிகாந்த், இதன் பின்பு சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கினர், அவரின் இரண்டாவது மகள் சௌதர்யா இயக்கத்தில் கோச்சடையான், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா போன்ற ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சரிவர லாபத்தை பெற்று கொடுக்கவில்லை.

இதன் பின்பு சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்த ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடித்தார், இது வெற்றியை பெற்று தந்தது, ஆனால் ரஜினிகாந்த் படங்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு கபாலி படத்துக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கபாலி படத்துக்கு பின்பு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வந்த ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். நான் அரசியலுக்கு வருவது உறுதி, “நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றும்.

மேலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன் அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது; ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது” நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிவிட்டார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இரண்டு மகள்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட பட்டுள்ளதாக கூறபடுகிறது, அதில் கபாலி படத்தின் வருமானம் இளைய மகள் சௌதர்யாவுக்கு, அடுத்து காலா படத்தின் வருமானம் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு என அடுத்தடுத்து பேட்ட, தர்பார், அண்ணாத்தே என தொடர்ந்து திரைப்படங்களில் இடைவேளை இல்லாமல் நடித்து வந்தார் ரஜினிகாந்த், இதில் காலா திரைப்படம் தனது மூத்த மகன் தனுஷ் சொந்த தயாரிப்பு.

இந்நிலையில் அரசியல் அறிவிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிய ரஜினிகாந்த் கொரோனவை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என ரசிகர்களுக்கு ஆல்வா கொடுத்து அண்ணாத்தே படப்பிடிப்பில் பிசியானார். இந்நிலையில் ரஜினிகாந்த் வருமானத்தை மகளுக்கு பிரித்து கொடுத்த பணத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா கணவர் தனுஷ் தனது மாமனார் போயஸ் கார்டன் வீட்டின் அருகே சுமார் 150 கோடியில் வீடு கட்டி வருகிறார்.

நீச்சல் குளம் வசதி, நவீன உடல்பயிற்சி கூடம், மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோம் தியேட்டர் வசதியும் இடம்பெற உள்ளதாம். மேலும் இன்னும் பிற வசதிகளையும் செய்ய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.வரும் தீபாவளிக்கும் கட்டி முடித்து கிரஹப்பிரவேசம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், லாக் டவுன் காரணமாக வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வீடு கிரஹப்பிரவேசம் செய்வதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டி ஆல்வா கொடுத்த ரஜினிகாந்த் ஒரு புறம் இருக்க, மறுப்பக்கம் போயஸ் கார்டனில் மிக பிரமாண்டமாக ரசிகர்கள் சிதற விட்ட சில்லறையில் மருமகன் வீடு கட்டி வருவதை அறிந்த சிலர் இனிமேலாவது ரசிகர்கள் நடிகர்களை நம்பி ஏமாறாமல் திருந்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.