லியோ வாங்கிய பலத்த அடி…. போன் போட்டு ஆறுதல் சொன்ன ரஜினி… என்னடா இது விஜய்க்கு வந்த சோதனை..

0
Follow on Google News

லியோ படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன வார்த்தையால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் இருப்பதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இம்மாதம் 19ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தைத் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்தது.

கைதி, விக்ரம் என பக்கா மாஸான படங்களைக் கொடுத்த லோகேஷ் மீதான எதிர்பார்ப்பு, பிரபலங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ஓங்கியிருந்தது. முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கப்பட்ட லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், இது விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.

அதற்கு மிக முக்கிய காரணம் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு தான் எனலாம். குறிப்பாக லியோ படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என பெரும்பாலான ரசிகர்கள் கூறி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும் என்ற சூழல் இருக்கும் நிலையில், லியோ படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காதது லோகேஷின் கரியரில் முதல் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் லோகேஷ் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். தற்போது, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் 170 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், அடுத்தவருடம் மார்ச் அல்லது ஏப்ரலில் லோகேஷ் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் லோகேஷ் ரஜினியை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து பலரும் மீம்ஸ்களில் விஜயை கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே, இயக்குனர் நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்து பயங்கரமாக அடி வாங்கி பின்னர், ரஜினியை வைத்து ஜெயிலர் படம் எடுத்து ஹிட் கொடுத்து மேலே வந்திருக்கிறார். இப்போது இயக்குனர் லோகேஷும் லியோ படத்தில் வாங்கிய அடிக்கும் ரஜினி படத்தின் மூலம் மருந்த்திட்டுக் கொள்ளப் போகிறார் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில் லியோ படத்தை பார்த்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் லலித்திடம் ப்ரொடக்சன் வேல்யூ அதிகம் இருக்கும் போல என்று சொல்லியிருக்கிறார். ஆனால், படம் எப்படி இருக்கிறது என்பது பற்றியோ, திரைக்கதை பற்றியோ எந்தவித கமெண்டும் சொல்லவில்லையாம். இதில் இயக்குனர் லோகேஷ் தான் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப் போகிறார்.

அந்த மரியாதைக்கு கூட லியோ படம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார் என்று செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பொதுவாகவே, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், எந்த படம் நல்லா இருந்தாலும், உடனடியாக படக்குழுவினரை நேரிலோ அல்லது அலைபேசியிலோ தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பார்.

சில சமயங்களில் நேரில் வரவழைத்து பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர். இப்படிப்பட்ட மனிதர் லியோ வை பார்த்துவிட்டு கம்முன்னு இருக்கிறார் என்றும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ரஜினியின் மவுனம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அப்செட் ஆக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.