விஜயை தேடி சென்ற பா.ரஞ்சித்… காக்க வைத்து என்ன செய்தார் விஜய் தெரியுமா.? இந்த அசிங்கம் பா.ரஞ்சித்துக்கு தேவையா.?

0
Follow on Google News

இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார், இவர் இயக்கிய இரண்டாவது படம் மெட்ராஸ் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். இந்த படம் வெளியான பின்பு பா.ரஞ்சித் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் நடைபெற்றது, மேலும் கபாலி படத்தில் ஒரு சிலரை சீண்டுவது போன்று காட்சிகள் இடம்பெற்றது.

கபாலி படத்திற்கு பின்பு தொடர்ந்து பல பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பா.ரஞ்சித் பேச தொடங்கினர், அதில் ஆண்ட பரம்பரை நோண்ட பரம்பரை என்று பேசி ஒரு குறிப்பிட்ட நபர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகினர், மேலும் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்த பா.ரஞ்சித் அரசியல் ரீதியாக அவர் எதிர்த்து கருத்து தெரிவிக்கும் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாரித்து கொண்டார்.

மேலும் பா.ரஞ்சித் உச்சகட்ட ஆணவமாக “மன்னர் ராஜராஜ சோழன் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்த நிலத்தை அபகரித்தார். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி” என்று அவர் தமிழ் மனனர் ராஜா ராஜா சோழன் பற்றி பேசியது ஆணவத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாதி அரசியல் தொடர்பான கருத்துக்களை அவர் தெரிவித்துவந்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ரஜினிகாந்தை வைத்து மேலும் ஒரு படத்தை இயக்கினார், இதன் பின்பு சமீபத்தில் சர்பட்ட பரம்பரை அவரது இயக்கத்தில் வெளியானது. இந்நிலையில் பா.ரஞ்சித் முன்னனி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார், அந்த வகையில் நடிகர் சூர்யா இவரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது ஆனால் அது என்ன ஆனது என்பது மர்மமாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து பல முன்னனி நடிகர்களின் வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார் பா.ரஞ்சித்.

ஆனால் பா.ரஞ்சித் தொடர்ந்து சாதி அரசியல் பேசிவருவது பெரும்பாலான மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த முன்னனி நடிகர்கள், மேலும் தங்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி திரைப்படத்தில் பா.ரஞ்சித் சாதி அரசியல் பேசினால் தாங்கள் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கினால் கூட, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் நடிப்பதற்கு அச்சப்படுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது, அதற்கான கதை கூட விஜய்யிடம் சொல்லி விட்டார் ரஞ்சித் என தகவல் வெளியானது, இதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்த நிலையில், விஜய்க்கு நெருக்கமாக சிலர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி எடுத்து கூறி நீங்கள் பகடை காயாக இருந்துவிட வேண்டாம் என எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து படம் இயக்க காத்திருந்த பா.ரஞ்சித்துக்கு இந்த ஒரு பதிலும் விஜய் தரப்பில் இருந்து வரவில்லை, தொடர்ந்து காலம் கடத்தப்பட்டு வந்தது, காத்திருந்த பா.ரஞ்சித் தனது படத்தில் விஜய் நடிப்பது மாதிரி தெரியவில்லை என உணர்ந்து, அதே கதையில் தற்போது மார்க்கெட் இழந்து உள்ள நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறபடுகிறது.