நயன்தாரா கேரவன் உள்ளே தீடிரென புகுந்த இயக்குனர்… உள்ளே என்ன நடந்துச்சு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் இன்று கேரவன் என்பது அத்தியாவசியமாக மாறிவிட்டது, இதற்கு முன்பெல்லாம் வெளி ஊர்களில் படப்பிடிப்பு நடக்கும் பொழுது. ஒரு மரத்து அடியில் சுற்றி திரை வைத்து மறைத்து, அந்த மறைவான இடங்களில் நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் ஆடை அலங்காரம் செய்து வந்தனர். மேலும் படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வு எடுப்பார்கள்.

ஆனால் இன்றைய சினிமா காலகட்டத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக கேரவன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கேரவனினால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு பிரச்சனைகளும் உருவெடுத்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து அந்த இடைவேளை நேரங்களில் சகஜமாக பழகும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் தற்பொழுது படத்தில் நடிக்கும் உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய பிரைவேசி கருதி சொகுசு கேரவனுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது படப்பிடிப்பின் இடைவேளையில் போது அவருக்கான சொகுசு கேரவனில் ஓய்வெடுக்க சென்றுள்ளார் நயன்தாரா.

நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது அவருக்கு பாதுகாப்புக்காக அவரை சுற்றி பவுன்சர்கள் இருப்பார்கள. அதேபோன்று நயன்தாரா கேரவன் உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது பவுன்சர் என்று அழைக்கப்படும் பாதுகாவலர்கள் எப்போதும் கேரவனுக்கு வெளியில் யாரையும் உள்ளே அனுமதிக்காதபடி அமர்ந்திருப்பார்கள்.

ஆனால், அன்று பவுன்சர்கள் கவனக்குறைவாக சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்தபோது, நயன்தாராவுக்கு நன்கு பரீட்சையமான இயக்குனர் ஒருவர் அனுமதி இன்றி நயன்தாராவு ஓய்வு எடுத்து கொண்டிருந்த கேரவன் உள்ளே அத்துமீறி சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத நயன்தாரா கடும் ஷாக் ஆகி உள்ளார். அந்த இயக்குனரை உள்ளே அமர வைத்துவிட்டு, கேரவன் மற்றொரு கதவு வழியாக வெளியே வந்துவிட்டார் நயன்தாரா.

சற்று தூரமா நின்ற பௌன்சர்களை அழைத்து மிக கடினமாக திட்டியுய நயன்தாரா, என்ன வேலை பார்க்கிறீர்கள், நாகரிகம் இல்லாமல் ஒருவர் அத்துமீறி உள்ளே வந்துள்ளார். உடனே உள்ளே சென்று அவரை வெளியே அப்புறப்படுத்துங்கள் என நயந்தாரா கோபமாக பேசியதை தொடர்ந்து உள்ளே சென்ற பவுன்சர்கள் அங்கே அமர்ந்திருந்த நயன்தாராவுக்கு ஏற்கனவே பரிச்சயமான அந்த இயக்குனரை வெளியேற்றி உள்ளார்கள்.

உயிருக்கு ஆபத்தாகிவிடும்… சந்திரமுகி 2 படத்தில்  நடிக்க ரஜினி மறுப்பு…எச்சரிக்கை சமிக்கை என்ன தெரியுமா.?