ஹைதெராபாத்தில் பிரமாண்ட செட்… லியோ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு….

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பெரும் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்கள் அனைத்துமே தொடர் வெற்றியை பெற்று வருகிறது.

இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் பிரமிக்கும் வகையில் எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் படப்பிடிப்பில் நடக்கும் அனைத்து தகவல்களையும் ரகசியமாக காத்து வருகிறது பட குழுவினர்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடித்துள்ளது, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக, பட குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளார்கள், இதில் இந்த படத்தில் நடிக்கும் விஜய் , திரிஷா , லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் காஷ்மீர் சென்றுள்ளார்கள்.சுமார் 14 வருடங்களுக்கு பிறகு விஜய் உடன் லியோ படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார் திரிஷா.

இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்துவிட்டு சென்னை திரும்ப இருக்கும் லியோ படக்குழுவினர் அடுத்து 10 நாட்கள் தொடர்ந்து சென்னையில் படபிடிப்பை நடத்த உள்ளனர். இதை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 20 நாட்கள் தொடர்ந்து படபிடிப்பு நடத்துவதற்காக ஒரு ஏர்போர்ட் போன்று பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது இந்த செட் படத்தின் வரும் கிளைமாக்ஸ் கட்சியில் வரும் சண்டை காட்சிக்காக அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.