சௌந்தர்யா – விசாகன் இடையில் மோதல்… காரணம் அனிருத்… வேதனையில் ரஜினிகாந்த்.! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

பணம், புகழ் என தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், தனது இரண்டு மகள்களால் நிம்மதியின்றி தவித்து வருகிறார். இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கனவர் அஸ்வின் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சட்டப்படி முதல் கனவரை விட்டு பிரிந்தார் சௌந்தர்யா, இதன் பின்பு இரண்டாவது விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா.இத்துடன் மகள் பிரச்சனை முடிந்தது என நிம்மதி பெருமூச்சு விட்டார் ரஜினிகாந்த்.

ஆனால் அடுத்த சில வருடங்களில் கடந்த ஜனவரி மாதம் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா அவரது கனவர் தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்துள்ளது மேலும் ரஜினிகாந்துக்கு வேதனையை கொடுத்தது. மீண்டும் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என விரும்பிய ரஜினிகாந்த் ஆசைகள் ஏதும் நிறைவேறவில்லை, அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் கனவர் தனுஷை விட்டு பிரிந்துள்ள ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார், 3 மற்றும் வை ராஜா வை படத்தை இயக்கியிருந்த ஐஸ்வர்யா தற்பொழுது மீண்டும் புதிய தமிழ் மற்றும் இந்தியில் படம் இயக்க உள்ளார். தமிழில் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்துக்கு அனிரூத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிரூத் ரஜினிகாந்த் மனைவவி லதா ரஜினிகாந்த் தம்பி மகன் என்பது குறிப்பிடதக்கது.

ரஜினிகாந்த் இரண்டு மகள்களுடன் நெருங்கமாக பழகி வருகின்றவர் அனிரூத். அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌதர்யாவை சந்தித்த அனிருத் நீண்ட நேரம் பேசியுள்ளார், அதில் ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளது குறித்து இருவரும் பேசியுள்ளனர். சௌந்தர்யா ஏற்கனவே கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் மேலும் கிராபிக் டிசைனராக படையப்பா, பாபா, சிவாஜி உட்பட பல படங்களில் பணியறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அக்கா ஐஸ்வர்யா போன்று சௌதர்யாவும் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்க வேண்டும் என சௌதர்யாவுக்கு ஆசையை தூண்டிவிட்டு சென்றுள்ளார் அனிரூத். இதன் பின்பு அக்கா போன்று தானும் படம் இயக்க இருப்பதாகவும் அதர்க்காக கதை தயார் செய்யும் பணியில் ஈடுபட இருப்பதாக குடும்பத்தில் தெரிவிக்க, இதற்கு கனவன் விசாகன் தரப்பில் இருந்து கடும் எதிப்பு கிளம்பியுள்ளது.

ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி 2 படத்தை சௌந்தர்யா இயக்குனராக பணியாற்றிய போது அவருக்கு கிடைத்த சினிமா துறையை சேர்ந்தவர்களின் நட்பினால், இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது, மது அருந்துவது, நடிகர்களுடன் கிசு கிசுவில் சிக்குவது என பல தகவல் வெளியானதை அறிந்து தான் சௌந்தர்யா மீண்டும் இயக்குனராக பணியாற்ற விசாகன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், ஆனால் சௌந்தர்யா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சௌந்தர்யா – விசாகன் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சிறு சிறு சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இரண்டாவது மகள் சௌந்தர்யா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை அறிந்து மன நிம்மதியின்றி வேதனையில் உள்ளார் ரஜினிகாந்த் என்றும், இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அனிரூத் தூண்டுதல் தான் என கூறப்படுவது குறிப்பிட்டத்தக்கது.

வீட்டு பக்கம் வரவே கூடாது.. அனிருத்தை விரட்டியடித்த ரஜினிகாந்த்…ஐஸ்வர்யா இப்படி செய்யலாமா.?