இரண்டு மகள்களுக்கு செம்ம டோஸ் விட்ட ரஜினிகாந்த்… காரணம் அனிருத்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் இரண்டு மகள்களின் குடும்பத்தில் தொடர்ந்து எதாவது ஒரு பிரச்சனைக்கு காரணமாக இருந்து வரும் அனிருத் தற்போது நடிகர் ரஜினிகாந்த் உச்சக்கட்டத்தில் கோபம் அடையும் அளவுக்கு ஒரு காரியத்தை செய்து, செம்ம டோஸ் வாங்கியுள்ளார். தனுஷ் – அனிரூத் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்த போதே அனிருத் மீது ரஜினிகாந்துக்கு கோபம் இருந்து வந்துள்ளது. இதன் பின்பு சிம்பு உடன் சேர்ந்து பீப் சாங் பிரச்சனையில் சிக்கிய பின்பு அனிருத்தை முற்றிலும் வெறுக்க தொடங்கியுள்ளார் ரஜினி.

இதன் பின்பு ஓரளவு குடும்பத்தினர் சமாதனம் செய்து ரஜினி நடிக்கும் படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புகளை பெற்றார் அனிருத், இருந்தும் ரஜினி ஒரு பக்கம் நடிக்க, அனிருத் ஒரு பக்கம் இசை அமைக்க, அனிருத் என்ன செய்கிறார், இசை எப்படி வந்துள்ளது என ஒரே படத்தில் பணியாற்றினாலும் அனிரூத்தை கண்டு கொள்ளவே மாட்டார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் குடும்பத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த அனிருத்தால் ரஜினிக்கு ஏகப்பட்ட பிரச்சனை.

அண்ணாத்தே படம் முடிந்த பின்பு மீண்டும் சன் பிக்ச்சர் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதியப்படம் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது, இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் படு தோல்வியை அடைந்து மண்ணை கவ்வியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு கட்சி நடிகர் ரஜினிகாந்துக்கு போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த ரஜினிகாந்த் செம்ம டென்ஷனில் தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையில் தனது புதிய படத்துக்கான இயக்குனரை மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனிருத் சிபாரிசில் ரஜினிகாந்த் இரண்டு மகள்களின் மூலம் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி மகள்களின் வற்புறுத்தல் காரணமாக ரஜினிகாந்த் புதிய படத்துக்கு நெல்சனை ஓகே செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின்னனியில் அனிருத் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பீஸ்ட் படம் வெளியான பின்பு அனிரூத் மற்றும் இரண்டு மகள்கள் மீது செம்ம கோபத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது ரஜினி புதிய படத்தில் தன்னை மாற்றி விடாமல் இருக்க, அனிரூத் உதவியை நாடியுள்ளார் நெல்சன். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இரண்டு மகள்களையும் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் புதிய படத்துக்கான இயக்குனரை மாற்றி விடாமல் ஏதாவது செய்யுங்கள் என அனிருத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தொடர்ந்து இரண்டு மகள்களும் இயக்குனர் நெல்சனை மற்ற வேண்டாம், கண்டிப்பா அவர் இயக்கத்தில் உங்கள் படம் வெற்றி பெரும். என அஹோ..ஓஹோ…என நெல்சனுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் டென்ஷனான ரஜினி, இனிமேல் என்னுடைய் கதை விவகாரத்தில் நீங்கள் யாரும் தலையிட வேண்டாம் இது தான் உங்களுக்கு கடைசி, இது என்ன சிறிய பட்ஜெட் படமா.? என்னை நம்பி ஒருவர் பல கோடி முதலீடு செய்கிறார்.

உங்களுக்கு என்ன தெரியும் என ரஜினி கடுமையாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அனிருத் குறித்தும் கடுமையாக ரஜினிகாந்த் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது புதிய படத்தில் இயக்குனர் நெல்சனை மாற்றுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில். அடுத்து யாருக்கு வாய்ப்பு என்பதில் ஏற்கனவே ரஜினியிடம் கதை சொன்ன இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இசைஞானி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பேராசிரியர்…. அண்ணல் அம்பேத்கர் பற்றி பலரும் அறிந்திராத தகவல் Full vedio