டபுள் கேம் விளையாடிய கஸ்தூரி ராஜா….ஏமாற்றப்பட்ட ரஜினிகாந்த்.! தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்தில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து ஒரு மாதமாக உள்ள நிலையில், இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவர்கள் குடும்பத்தை நம்ப வைத்த கஸ்தூரி ராஜா டபுள் கேம் விளையாடி ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கஸ்தூரி ராஜா – விஜய லட்சுமி தம்பதியினருக்கு தனுஷ் , செல்வராகவன் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு.

கடனில் இருந்து வந்த கஸ்தூரி ராஜா நடிகர் தனுஷ் நடிக்க தொடங்கிய பின்பு தான் குடும்பத்தின் பொருளாதாரம் சீரானது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் வெற்றியை கொடுத்தாலும் அதன் பின்பு அவர் இயக்கத்தில் வந்த படம் தோல்வியை தழுவியது. இதனால் திரைப்படம் வாய்ப்புகள் இல்லாமல் பொருளாதார சிரமத்தில் இருந்து வருகின்றவர் செல்வராகவன்.

மேலும் கஸ்தூரி ராஜா குடும்பத்தில் , அவருடைய மகள்கள் இருவரின் குடும்பம், செல்வராகவன் குடும்பம், தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் தாய் இவர்கள் அனைவரின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் பண உதவி செய்து வருகின்றவர் தனுஷ். கஷ்டத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்து தூக்கி விடுவது இயல்பு தான், தூக்கி விட்ட பின்பு அவர்கள் முயற்சியில் எதோ ஒரு வகையில் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கி கொள்ள வேண்டும்.

ஆனால் கஸ்தூரி ராஜா குடும்பத்தில் அப்படி இல்லை, தனுஷ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் தொடங்கி தற்போது வரை தனது அண்ணன் செல்வராகவன், இரண்டு சகோதரிகள் குடும்பம், தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு பண உதவி செய்து வருகிறார் தனுஷ், இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனைவி ஐஸ்வர்யா விருப்பத்துக்கு மாறாக தொடர்ந்து தனுஷ் தனது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக முடிவு செய்த போது கஸ்தூரி ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த ஒரு எதிர்ப்பு தெரிவிக்காமல் உனது விருப்பம் போல் செய்து கொள் என தனுஷிடம் தெரிவித்துள்ளார்கள். ஆரம்பத்திலே கஸ்தூரி ராஜா நினைத்திருந்தால் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரின் பிரிவு நிறுத்தப்பட்டிருக்கும் என கூற படுகிறது. ஆனால் தனது குடும்பத்துக்கு மகன் தனுஷ் பண உதவி செய்ய தடையாக இருக்கும் ஐஸ்வர்யாவிடம் இருந்து மகன் பிரிவது சிறந்த முடிவு என கஸ்தூரி ராஜா இந்த விவகாரத்தில் எந்த ஒரு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கஸ்தூரி ராஜா விருப்பத்துக்கு ஏற்ப நடந்த தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு பின், ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கஸ்தூரி ராஜாவை தொடர்பு கொண்டு மீண்டும் இணைத்தது வைக்க நீங்க தான் பேச வேண்டும் என தெரிவிக்க. ஐஸ்வர்யாவிடம் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என அறிவுரை வழங்கியவர் கஸ்தூரி ராஜா. மகன் தனுஷிடம் உனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய், உன்னுடைய சந்தோசம் தான் நம்ம குடும்பத்துக்கு முக்கியம் என பேசியதாக கூறப்படுகிறது.

இப்படி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைவதர்க்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல்,தற்போது மகன் தனுசுடன் சென்னையில் தனது வீட்டில் வசித்து வரும் கஸ்தூரி ராஜா இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் எப்படியும் கஸ்தூரி ராஜா மகனிடம் பேசி மீண்டும் பிரிந்த தம்பதியினரை இணைத்து வைத்து விடுவார் என்கிற நம்பிக்கையை வீணடித்து டபுள் கேம் விளையாடி தனது குடும்ப சுயநலத்துக்காக தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணையாமல் பார்த்து கொண்டார் என கூறபடுகிறது.