அடிப்படை அறிவு இல்லாமல் கேள்வி கேட்க கூடாது…வசைபாடியவர் மீது சீறி பாய்ந்த சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடவர்களாக அறிமுகமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர்.கிராமிய பாடல்களை அனைவரும் மனதிலும் பதியும் வகையில் பாடுவதில் திறமை வாய்ந்தவர்கள். பாடல் மட்டுமின்றி இவர்களது உடையும் வேஷ்டி சேலை என்று பாரம்பரியமாகவே இருக்கும்.

இவ்வாறு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்களுக்கென ஒரு பாணியில் தோன்றி அருமையான நாட்டுப்புற பாடல்களை பாடி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தனர். குறிப்பாக ராஜலட்சுமி பாடிய பாடல் திடீரென இணையத்தில் வைரலாகவே, இந்த தம்பதியினர் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டனர். இதனால் நிறைய படங்களில் பாடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. மேலும் ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இதுதவிர செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து இருளி எனும் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி அளித்த பேட்டியில், ”சினிமாவில் நாங்கள் சாதித்து பல கோடி சொத்து வைத்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் வீடு, கார் எல்லாமே கடனில் வாங்கியது, எங்களுக்கு நிறைய கடன் இருக்கு, அதுவும் கொரோனா காலத்துல ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காததால் ரொம்பவே கடனில் கஷ்டப்படுகிறோம்” என தெரிவித்த ராஜலக்ஷ்மி.

மேலும், கடன் பற்றி தானும் தனது கணவரும் பேசும் போது, நான் என் கணவரிடம் ​​ஒரு வேளை பேங்கக்காரங்க வந்து வீட்டை பிடிங்கிட்டு போயிட்டா என்ன பண்றது என கேட்டேன் அதற்கு, அப்படியே சொந்த ஊரு பக்கமா போயிட வேண்டியது தான் என்று கணவர் செந்தில் கணேஷ் சொன்னதாக ராஜலட்சுமி மிக உருக்கமாக பேசி இருந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தம்பதியினர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் சமீபத்தில் அமெரிக்காவில் பனிப்பொழிவு என்ற வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் ராஜலட்சுமி அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இளைஞருடன் ஆங்கிலத்தில் உரையாடியிருந்தார். மேலும், எப்போதும் சேலையில் மங்களகரமாக இருக்கும் ராஜலட்சுமி அந்த வீடியோவில் ஜீன்ஸ் பேன்ட்- சர்ட்டில் மார்டனாக இருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் சரமாரியான விமர்சனங்களை முன் வைத்தனர், அதில் “காசு வந்து விட்டால் காக்காவும் கலர் குஞ்சாகி விடும்”, ‘இப்ப எதுக்கு இங்கிலீஷ்ல பேசி பீட்டர் விடுறாங்க” என்றெல்லாம் மோசமாக விமர்சித்திருந்தனர். இந்த கமெண்ட்களை பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜலட்சுமி தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொங்கி எழுந்துள்ளார்.

அவர் கொடுத்த பதிலடியில், ஆங்கிலம் மீது எனக்கு ஆசை இருந்தது. அதை கற்றுக் கொள்ள விரும்பினேன். அதனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். ஆங்கிலத்தை நமக்குள்ளேயே பேசாமல் பொது இடங்களில் பேசினால் தவறுகள் தெரியவரும் என்பதால் நான் அந்த வீடியோவில் பேசினேன். அதற்கு மோசமாக கமென்ட் போட்டுட்டு இருக்காங்க, அடிப்படை அறிவு இல்லாதவங்கத்தான் இப்படி பேசுவாங்க.

என்னோட உடை குறித்தும் பேசி இருந்தாங்க. எது எனக்கு சரியா இருக்கோ அதை நான் போடுறேன். அதுல என்ன இருக்கு? எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன், அந்த கமென்ட்டுகளை பார்த்துவிட்டு நான் அதே உடையில் நிறைய வீடியோக்களை பதிவிட்டேன்” என தனக்கு எதிராக பேசி வந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள ராஜலக்ஷ்மி குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.