ரோகினி ஒரு பிராடு என மனோஜுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய முத்து… வசமாக சிக்கிய ரோகிணி..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வேலை இல்லாமல் நீ வீட்டுக்கு வரக்கூடாது’ என்று கறாராக ரோகிணி மனோஜ் இடம் சொல்கிறார். ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் வேலைக்கு சேர்ந்து வீட்டிற்கு வரும் மனோஜ் வேலை கிடைத்து விட்டதாக பெருமையாக பேசும் மனோஜ், முதல் நாளில் கிடைத்த சம்பளத்தில் தனது மனைவிக்கு அல்வா வாங்கி கொண்டு வந்திருப்பதாகவும் மனோஜ் கூறுகிறார்.

அப்போது முத்து, ‘எந்த நிறுவனத்திலும் முதல் நாள் சம்பளம் கொடுக்க மாட்டார்களே, தினக்கூலியாக வேலை பார்த்தால் மட்டுமே ஒவ்வொரு நாளும் சம்பளம் கொடுப்பார்கள் என்று சந்தேகத்தை எழுப்புகிறார். இதனை அடுத்து மனோஜை தனியாக அழைத்து செல்லும் ரோகிணி ’என்ன வேலையில் சேர்ந்து இருக்கிறாய்? என்று கேட்க அவர் ’உனக்காக நான் என்னுடைய திறமைக்கு மதிப்பில்லாத வேலையில் தான் சேர்ந்திருக்கிறேன், இருப்பினும் விரைவில் நல்ல வேலையை தேடிக்கொள்வேன் என்று சமாதானம் கூறியதோடு,

ஆனால் உண்மையில் மனோஜ் ஹோட்டலில் அவமானம் படுகிறார். சாப்பிட வந்தவரிடம் என்ன சாப்பிடுறீங்க என்று கேட்க, அதற்கு அவர் ஹோட்டலில் என்ன இருக்கு என்று கேட்க மனோஜ் ஹோட்டலில் இருக்கும் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் .அவர் இந்த ஹோட்டலில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறார் அதற்கு மனோஜ் இந்த ஹோட்டலில் ரவா கிச்சடி தான் ஸ்பெஷல் என்று சொல்ல சரி அதையே எடுத்துட்டு வா என்று சொல்கிறார்.

சரி என்று மனோஜ் எடுத்துட்டு வர போக அங்கு ஹோட்டலில் ரவா கிச்சடி தீர்ந்து போச்சு என்று சொல்ல அதை நீங்களே அவங்க கிட்ட சொல்லிடுங்க என்று மனோஜ் சொல்லிவிட்டார். பிறகு சப்ளையர் வந்து ரவா கிச்சடி இல்லை என்று சொல்ல கஸ்டமர் கோவப்பட்டு இதைக்கூட சரியா பார்த்து சொல்ல மாட்டியா தண்டசோறு இவனை எல்லாம் எதுக்கு வேலைக்கு எடுக்குறீங்க என்று திட்டுகிறார்.

ஏற்கனவே மனோஜ் ஒரு பிராடு என அவருடைய முகத்திரையை முத்து கிழித்த நிலையில், தற்போது ரோகிணி முகத்திரையும் கிழிய இருக்கிறது. அதாவது ரோகிணி பார்லருக்கு வேறு பெயர் இருப்பதை பார்த்து முத்து அண்ணாமலையிடம் மட்டும் தெரிவித்துவிட்டு மனதுக்குள் வைத்து கொள்கிறார், ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை அண்ணாமலை விஜயாவிடம் சொல்ல, விஜயா நம்பவில்லை.

உடனே முத்து ஆதாரத்தை காட்டுகிறார். தன்னுடைய பணம் எல்லாம் போய்விட்டது என விஜயா மனம் உடைக்கிறார். மறுபக்கம் இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் நான் ஒரு பொய் சொன்னதுக்கு என்ன அவ்வளவு கஷ்டப்படுத்தின. ஆனா நீ இப்ப எங்க குடும்பத்தையே ஏமாத்திட்டியே என ரோகிணியிடம் வேதனையை மனோஜ் வெளிப்படுத்தும் காட்சிகள் இனிவரும் நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இருந்தாலும் மாமியரை பொய் சொல்லி சமாதனம் செய்து விடுகிறார் ரோகினி, மனோஜ்ம் சமாதனமாகிறார், இருந்தும் மனோஜ் – ரோகினி இருவரும் ஒரே கட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை அறிந்து ரோகிணியின் நடவடிக்கைகளை சந்தேகத்துடன் தான் பார்க்கிறார் முத்து, ஒரு முறை முத்து நண்பர் ரோகிணியின் மலேசியா மாமா கறி கடையில் கறி வெட்டுவதை பார்த்து உடனே முத்துவுக்கு போன் செய்து தகவல் கொடுக்கிறார்.

ஆஹா நம்ம சந்தேகப்பட்டது சரி தான் என்று மலேசியா மாமா மொத்த விவரத்தையும் சேகரிக்கிறார், எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் மனைவி மீனாவிடம் மட்டும் இந்த விஷயத்தை தெரிவிக்க, அதற்கு மீனா மாமாவுக்கு தெரிய வேண்டாம், அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை, இனி இந்த விஷயம் தெரிந்தால் இன்னும் மனது கஷ்டப்படும் என தெரிவிக்க, இருந்தாலும் ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை மொத்த குடும்பத்தினர் மத்தியில் போட்டுடைத்து விடுகிறார் முத்து.