ஜி.வி பிரகாஷ் தலையில் மிளகாய் அறைத்து காசை சுருட்டிய சைந்தவி! விவாகரத்திற்கு காரணம் இதுதானா?

0
Follow on Google News

2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து 11 வருடங்கள் திருமண உறவில் இருந்த இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கடந்த மே 14ஆம் தேதி தங்களது திருமண உறவை முறித்துக் கொண்டு விவாகரத்து பெற்றதாக அறிவித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் இந்த முடிவானது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் பலரும் ஜிவி பிரகாஷ்க்கு எதிராகவே தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்ததும் கவனிக்கத்தக்கது. அதாவது சைந்தவி ஒரு சிறந்த மனைவி என்றும் அவரின் காதல் ஜிவி பிரகாஷ்க்கு புரியவில்லை என்றும், இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று ஜிவி பிரகாஷ்க்கு பல நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும், பல படங்களில் நடிகைகளோடு மிக நெருக்கமான சீன்களில் நடித்து வருவதாகவும், இதை சைந்தவி தவிர்க்க சொல்லியும் கேட்காததால் தான் சைந்தவி ஜீவி பிரகாஷ் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறிவந்தனர்.

அதோடு பல ரசிகர்கள் ஜீவி பிரகாஷ்க்கும் Bachelor பட நடிகையான திவ்யபாரதிக்கும் இடையே கிசுகிசுத்து வந்தனர். இவ்வாறு ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமே ஜிவி பிரகாஷ்க்கு எதிராக தங்களது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, சைந்தவி மேல் இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை பத்திரிக்கையாளர் உமாபதி அவர்கள் முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் தனியார் youtube சேனலுக்கு பேட்டியளித்த அவர் ஜீவி பிரகாஷ் சைந்தவி விவகாரத்திற்கு காரணம், சைந்தவி தான் என குண்டை தூக்கி போட்டுள்ளார். அதாவது சைந்தவி அவர்கள் ஜிவி பிரகாஷை திருமணம் செய்ததை பணத்திற்காக தான் என்றும், அவரை திருமணம் செய்தவுடன் பெயர், புகழ், பணம் எல்லாம் கிடைத்த பின்பு, தற்போது தனக்கு சுதந்திரம் தேவை என பிரிவது எந்த வகையில் ஏற்புடையது என்றும் விளாசியுள்ளார்.

மேலும் சைந்தவி பக்காவாக பிளான் போட்டு ஜிவி பிரகாஷை திருமணம் செய்து, ஜிவி பிரகாஷின் மண்டையில் மிளகாய் அரைத்து எல்லா செல்வத்தையும் பத்து வருடமாக அனுபவித்து விட்டு, தற்போது ஜிவி பிரகாஷை தூக்கி போட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் விவாகரத்துக்குப் பிறகும் ஜிவி பிரகாசிடமிருந்து ஒரு லம்ப் Amount-ஐ சைந்தவி சுருட்டி விட்டு சென்றதாகவும் பகிர் கிளப்பியுள்ளார்.

ஒன்றாக வாழும் வரையிலும் ஜீவியின் பணம், செல்வாக்கை அனுபவித்துவிட்டு பிரிந்து செல்லும்போதும் ஒரு லம்ப் Amount-ஐ சுருட்டி சொல்வதும் தான் காதலா என கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் உமாபதி. சமீபத்தில் பல நடிகர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரியும் நிகழ்வு அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக தனுஷ் ஐஸ்வர்யா, சமந்தா நாக சைதன்யா என இன்னும் பலர் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்.

இதில் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் விவாகரத்து ரசிகர்களால் பெரும் பேசுபடு பொருளாக இருந்து வந்தது. மேலும் பலர் தனுஷ் தான் தமிழ் சினிமா நடிகர்களின் விவாகரத்துக்கு காரணம் என்றும் பல மீம்ஸ்களை பகிர்ந்து வருவதும் கவனிக்கத்தக்கது. அதோடு ரசிகர்கள் பலரும் மயக்கம் என்ன படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே பாடலின் பாடலாசிரியர் மற்றும் நடிகருமான தனுஷ், பாடகி சைந்தவி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், மற்றும் இயக்குனர் செல்வராகவன் என இப்படத்தில் பணியாற்றிய நான்கு பேருக்கும் விவாகரத்து ஆனதையொட்டி இந்த பாடலை ரசிகர்கள் விவாகரத்து பாடல் என்றும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தங்களின் விவாகரத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்ததையொட்டி எனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்றும், என் விவாகரத்து பற்றி தயவு செய்து யாரும் விவாதிக்காதீர்கள் என்றும் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.