பொன்னியின் செல்வன் படபிடிப்பு நிறைவு… 2022ல் வெளியாகிறது…!

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இப்பெரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதத்திலேயே முழுவதுமாக முடிக்கப்பட்டது.

ஆனால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா பெரும் தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. மீண்டும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் ஒரே பாகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப் படம் இரண்டு பாகமாக எடுக்கப்படும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இதன் பிறகு பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது, சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு பொன்னியின் செல்வனின் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு புது விதமாக அமைந்துள்ளது.

மேலும் இந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் படத்திற்கான பிடிக்கும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் 2022ம் ஆண்டு சம்மரில் வெளியாகும் என்று அளிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சமூகவலைதளத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.