லாக்கரில் இருந்த நகை திருட்டு…. துபாயில் இருக்கும் விஜய் யேசுதாஸ்… நீடிக்கும் குழப்பம்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போன புகாரில், ஐஸ்வர்யா வீட்டின் வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் இருவரும் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளார்கள், வேலைக்கார பெண் ஈஸ்வரி சிறுக சிறுக ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸுக்கு சொந்தமாக சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகளை கடந்த டிசம்பர் மாதம் அவரது மனைவி பார்த்துள்ளார், ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என மார்ச் மாதம் விஜய் யேசுதாஸ் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் தனுஷ் உடன் நெருங்கிய நண்பரான விஜய் ஜேசுதாஸ் மிக நெருக்கமான குடும்ப நண்பர்களாக வலம் வந்தனர், நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா என இந்த இரண்டு குடும்பமும் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.அப்படி இருக்கையில் இருவர் வீட்டிலும் அதிலும் லாக்கரில் இருந்த நகை ஒரே மாதிரியாக திருடு போய் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன நகைகளை மிக எளிதாக கண்டு பிடித்த போலீசாரால் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் திருடியவர்கள் யார் என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் நகைகளை காணவில்லை என மார்ச் மாதம் புகார் கொடுத்துள்ளர், நகைகள் காணாமல் போன பிப்ரவரி மாதம் வேலைக்கார பெண் வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார் விஜய் யேசுதாஸ் மனைவி.

மேலும் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் சிக்கியுள்ளா, ஐஸ்வர்யா வீட்டு கார் டிரைவர் வெங்கடேஷ், இதற்கு முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்துள்ளார், அதன் பின்பே ஐஸ்வர்யா வீட்டில் வேலைக்கு வந்துள்ளார். விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலையை விட்டு நின்றாலும் அடிக்கடி விஜய் யேசுதாஸ் வீட்டிற்கு டிரைவர் வெங்கடேசன் சென்று வந்துள்ளாதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா வீட்டின் லாக்கர் சாவி பயன்படுத்த கூடியது, விஜய் யேசுதாஸ் வீட்டில் லாக்கர் பாஸ்வேர்டு பயன்படுத்தி திறக்க கூடிய டிஜிட்டல் லாக்கர்.இந்த லாக்கர் பாஸ்வர்ட் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் மட்டுமே தெரியும் என்று கூறப்டுகிறது. இந்நிலையில் விஜய் ஜேசுதாஸ் துபாயில் இருந்து வந்த பின்பு அவரிடமும் விசாரணையை மேற்கொள்ள இருப்பதால். அடுத்தடுத்து விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது கண்டுபிடிக்கபடும் என கூறப்படுகிறது.