அனிரூத்தை திருமணம் செய்வேன்.. பிரபல பின்னனி பாடகி பரபரப்பு பேச்சு..!

0
Follow on Google News

சென்னை : தமிழ்த்திரைப்படங்களில் மணிரத்னம் மூலம் பின்னணிப்பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜோனிதா காந்தி. தனது கிறங்கவைக்கும் குரலாலும் வசீகரிக்கும் அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இந்த ஜோனிதா. அனிருத் இசை என்றாலே கண்டிப்பாக அதில் ஜோனிதா இருப்பார். அந்த அளவிற்கு அனிருத்தும் இவரும் நெருக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜோனிதா மேடையில் ” நான் அனிருத்தை திருமணம் செய்வேன். ரன்வீருக்கு கையில் முத்தம் கொடுப்பேன். நான் சூர்யாவின் தீவிர ரசிகை” என கூறியுள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பான ஓகே கண்மணி மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தவர் ஜோனிதா. இவர் கனடா நாட்டுக்காரர் என்பது கூடுதல் சிறப்பு.

கடந்த வாரம் ஜோனிதா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கில் மோரி கிஸ் என்ற விளையாட்டு நடத்தப்பட்டது. அதில் எனது அழகால் அனைவரையும் கொல்வேன் என கூறினார். டெல்லியில் பிறந்த பஞ்சாபியான இவர் சிறுபிராயத்திலேயே கனடா சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். தமிழே தெரியாத அவரை அழைத்துவந்த ரஹ்மான் மெண்டல் மனதில் என்ற பாடலை பாடவைத்தார்.

அந்த பாடலை தொடர்ந்து பிஸியான பாடகியாக மாறிவிட்டார் ஜோனிதா. மேலும் அவருக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழில் அழகாக பாடுகிறார். அவர் கூறுகையில் ” பஞ்சாபி ஹிந்தி பாடல்கள் பாடுவது எனக்கு எளிது. ஆனால் தமிழ் எனக்கு பாடுவது சிரமம்.

கடவுள் எனக்கு மிமிக் செய்யும் திறமையை கொடுத்துள்ளார். அதனால் எனக்கு எளிதாக உள்ளது.நான் கடினமாக உழைக்கிறேன். எனது குழு எனக்கு உறுதுணையாக இருக்கிறது” என ஜோனிதா அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?