இமான் மனைவி விவகாரம்… அப்பாடா…ஒரு வழியாக எஸ்கேப் ஆனேன்… பெரும் மூச்சு விடும் சிவகார்த்திகேயன்..

0
Follow on Google News

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு ஒரு கன்டென்ட் கிடைத்து விட்டால் போதும், அதை வைத்தே மாதம் முழுவதும் ஓட்டி விடுவார். சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் அனைத்து சினிமா பிரபலங்களையும் ட்விட்டரில் ரோஸ்ட் செய்து வரும் ப்ளூ சட்டையிடம் இப்போது சிவகார்த்திகேயன் வசமாக மாட்டியுள்ளார். தற்போது, இணையம் முழுவதும் மன்சூர் அலிகான் சர்ச்சை மற்றும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் என்று நெட்டிசன்களுக்கு வேற கன்டென்ட் கிடைத்து விட்டதால், சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சையை மறந்து விட்டார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் மீண்டும் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் அவர்கள் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று முதல் தினமும் சோஷியல் மீடியா முழுவதும் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து பல மீம்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் வந்து கொண்டிருந்தன.

ஆனால், இதை எதையும் கண்டு கொள்ளாத சிவகார்த்திகேயன், இமான் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார். இப்படியான நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்கியதில் இருந்து சோஷியல் மீடியா முழுவதும் வேர்ல்ட் கப் டிரெண்டிங்கில் சென்றது, இதனால் சிவகார்த்திகேயன் சர்ச்சை காணாமல் போனது. மேலும், இப்போது மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா நேரடியாக ட்விட்டரில் கண்டம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை திரிஷாவிற்கு ஆதரவாகவும், மன்சூருக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர். இவ்வாறு சோஷியல் மீடியாக்களில் கிரிக்கெட் வேர்ல்ட் கப், மன்சூர் அலிகான்-திரிஷா சர்ச்சை என வரிசையாக பல்வேறு கன்டென்ட்கள் வைரலாக பேசப்பட்டு வருவதால், சிவகார்த்திகேயன் சர்ச்சையை மறந்துடாதீங்க என்று சொல்லும் வகையில் ப்ளூ சட்டை ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதாவது, “CSK: அப்பாடா…மன்சூர் அலிகான், வேர்ல்ட் கப் னு டைவர்ட் ஆகி..நம்மள மறந்துட்டாங்க… இன்னும் கொஞ்ச நாளைக்கு மீடியா பக்கம் தலைகாட்டாம தலைமறைவாவே இருப்போம்..” என்று ப்ளூ சட்டை சிவகார்த்திகேயனை தாக்கும் வகையில் ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார். இந்தப் போஸ்டுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் மோசமான கமெண்ட்களை வாரி இரைத்து வருகின்றனர்.