இளையராஜா போன்று ஏ.ஆர். ரகுமானும் சங்கி தான்… போட்டுடைத்த கங்கை அமரன்…

0
Follow on Google News

கங்கை அமரனுக்கும், இளையராஜாவிற்கும் இடையே பல ஆண்டு காலமாக பனி போர் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை. குறிப்பாக பவதாரிணியின் உயிரிழப்புக்குக் கூட கங்கை அமரன் வராததற்கு காரணம் அவரும் இளையராஜாவும் பேசிக்கொள்ளாததுதான் எனவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “உறவு என்று இளையராஜாவின் பக்கத்தில் இப்போதைக்கு யாரும் இல்லை. எனக்காவது என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் புண்ணியத்தில் நான் இன்று நலமாக இருக்கிறேன். ஆனால் இளையராஜாவோ அவரது மகன்களுடன் பேசிக்கொள்வதே இல்லை. பேரன் பேத்திகளோடு பேசுவார் அவ்வளவுதான்.

இருந்தாலும் அண்ணன்தானே என்று ஒரு நானே ஃபோன் செய்து, நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. இருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினேன்” என்றார். தற்போது கங்கை அமரன் மற்றொரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் கோட் படத்தில் கங்கை அமரன் ஒரு பாடல் எழுதியிருக்கிறாராம்.

மேலும் தினமும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து படம் எப்படி வந்திருக்கிறது என கங்கை அமரன் கேட்பாராம். நல்லா வந்திருக்குது டேடி என்று வெங்கட் பிரபு சொன்னாலும் விஜயும் பேசுவாராம் . அவரும் கங்கை அமரனிடம் ‘வெங்கட் பிரபு போட்டு பிழிஞ்சி எடுக்கிறான். படம் நல்லா வந்திருக்குது அப்பா’ என கூறுவாராம்.

மேலும் இந்த வருடம் கண்டிப்பாக பிரேம்ஜியின் திருமணம் நடைபெறும், அவன் திருமணம் தான் பெரும் புரட்சியையே ஏற்படுத்தப் போகிறது என்றும் மலராத செடி கூட மலரும் என்றும் தன் மகன் திருமணத்தை பற்றி அவரே கலாய்த்துக் கூறினார். மேலும் சங்கிகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த கங்கை அமரன் ‘ நான் ஒரு சங்கி. இளையராஜா பெரிய சங்கி. ஏஆர் ரஹ்மானும் ஒரு சங்கிதான்’ என சங்கீதத்தில் இருப்பதால் சங்கி என அர்த்தத்தில் இப்படி கூறியுள்ளார்.