யாரோ போட்ட மியூசிக்.. நான் போட்டேன் என ஆஸ்கர் அவார்ட் வாங்கினாரா ஏ.ஆர்.ரகுமான்.!

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தின் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதரித்தவர் ஏ ஆர் ரகுமான். அன்று முதல் இன்று வரை ரசிக்கும் படியான பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக பயணித்து வரும் இவர் ஏராளமான மேடைகளில் எக்கச்சக்கமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

அவற்றின் குறிப்பிடத்தக்கது என்றால் ஆஸ்கார் விருது தான். 2009 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்திருந்த மிகப்பெரிய மேடையில், ஆஸ்கர் விருதை பெற்றதும் “எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே” என்று தமிழில் பேசி தமிழையும் தமிழர்களையும் பெருமைப்படுத்தினார். ரகுமானின் இசையில் ஒரு மேஜிக் இருக்கிறது என்றே கூறலாம்.

ஆஸ்கார் நாயகன் என்று அழைக்கப்படும் ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில திரைப்படத்தில் ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருதுகளை வென்று இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்நிலையில், பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா ரகுமான் ஆஸ்கார் வென்ற ‘ஜெய் ஹோ’ பாடலின் இசை அவருடையது இல்லை என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் அவரது பேச்சுக்கு ரகுமான் ரசிகர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இயக்குனர் ஆன ராம்கோபால் வர்மா, சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பற்றி பேசியுள்ளார். அந்த பேட்டியில், “ரகுமான் ஆஸ்கார் வென்ற பாடலான ஜெய்ஹோ பாடலுக்கு உண்மையில் அவர் இசையமைக்கவில்லை. பிரபல இந்தி பாடகர் ஆன சுக்விந்தர் சிங் அப்போது சல்மான் கான் நடித்திருந்த யுவராஜ் படத்திற்காக கம்போஸ் செய்து வைத்திருந்தார்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் அந்த இசை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்” என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். ஏ ஆர் ரகுமானை பற்றி ராம்கோபால் வர்மா பேசிய இந்த வீடியோ இணையத்தில் காட்டுத் தீவிரியாய் பரவ ஆரம்பித்தது. மேலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பாடகர் சுக்விந்தர் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது; “இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறுவது உண்மை இல்லை. ஜெய் ஹோ பாடல் முழுவதும் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்தது தான். ஆனால் ராம்கோபால் வருமா? எதையோ தவறாக புரிந்து கொண்டு இவ்வாறு பேசி வருகிறார்” என்று கூறியுள்ளார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஏ ஆர் ரகுமான் மீது அவதூரை பரப்பியதற்காக, ராம்கோபால் வர்மா மீது ஏ ஆர் ரகுமான் ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஏ ஆர் ரகுமான் இந்த விஷயத்தை கண்டுக்காத போல் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here