லிவிங் ரிலேஷன்.. பாதிக்கப்பட்ட ஆண்கள் தான் அதிகம்… சூடு பிடிக்கும் பிக்பாஸ் விக்ரமன் விவகாரம்.

0
Follow on Google News

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர் விக்ரமன். இந்நிலையில் தலித் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான கிருபா முனுசாமி தன்னை விக்ரமம் ஏமாற்றிவிட்டதாக அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

என்னை மனைவியாக உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்த விக்ரமன், இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்துள்ளதாகவும் , மேலும் விக்ரம் மேனேஜர் என்று சொன்ன பெண்ணுடன் காதலில் விக்ரமன் ஒன்றரை ஆண்டுகாலாமாக இருந்ததை நான் அறிந்தேன். அதன் பின்னர் விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்று சொன்ன 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பேசினேன்.

அதில் விக்ரமன் பலரை ஏமாற்றியது எனக்கு தெரியவந்தது. அவர்களில் பலருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. அதே போல் சில ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார். மேலும் தன்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், என பல பொருட்களை வாங்கிய விக்ரமன் அத்துடன், யூடியூப் சேனல் நடத்தப்போவதாக கூறி ஆப்பிள் லேப்டாப்பை வாங்கிதரும்படி விக்ரமன் தொல்லை கொடுத்தார். விக்ரமன் தனது சொந்த காருக்கான டவுன் பேமெண்ட் மற்றும் இ.எம்.ஐகளை என்னிடம் இருந்து கட்டயப்படுத்தி வாங்கி கொண்டார் என விக்ரமன் மீது கிருபா முனுசாமி பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் விக்ரமன் மீதுள்ள பெண் தெரிவித்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ள விக்ரமன், கடந்த ஒன்றை வருடங்களுக்கு முன்னாடி எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. நண்பர்களாகத்தான் நாங்கள் இருவரும் பேசி பழகினோம். அப்போது எனக்கு நட்பு முறையில் தான் பணம் தேவைப்பட்டது. அவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கினேன். அது உண்மைதான். அப்படி வாங்கின பணத்தை நான் திருப்பி கொடுத்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என தெரிவித்துள்ள விக்ரமன்.

எமோஷனல் டார்ச்சர் தந்ததாக சொல்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருப்போம் என்று தான் பழகிருந்தோம். திடீரென்று அவர்கள் என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தில் மாற்றம் தெரிந்தது. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பின் அவர் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டார். நான் அப்படியெல்லாம் உங்களுடன் பழகவில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனாலும் அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அதற்கு பிறகும் அவர் நம்ம கல்யாணம் செய்து கொள்ளலாம். பிடிக்கலை என்றால் பிரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் பேசினார். அப்போது பிரிந்து அவர்களை விட்டு விலகத் தொடங்கினேன். என் மீது கோபத்தை வெளிப்படுத்த தான் இப்படி எல்லாம் செய்கிறார். அதோடு வேறு சில பெண்களையும் நான் ஏமாற்றி விட்டேன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். சொல்ல போனால், கிருபாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பட்டியல் என்னிடம் நிறைய இருக்கிறது.

ஆண்களிடம் ஏற்கனவே லிவிங் ரிலேஷனில் இருந்திருக்கிறார். இப்பதான் எனக்கு அதெல்லாம் தெரிய வருகிறது. என்னால் அந்த பட்டியலை கூட வெளியிட முடியும். ஆனால், அவங்க நடந்து கொண்ட மாதிரி எனக்கு நடக்க விருப்பமில்லை. இதைப்பற்றி நான் இன்னும் பேச விருப்பமில்லை என விக்ரமன் தன் மீது கிருபா முனுசாமி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் விக்ரமன் 15க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார் என கிருபா தெரிவித்துள்ளதும், இல்லை இல்லை அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பட்டியல் என்னிடம் உள்ளது என விக்ரமன் பதிலளித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.