லியோவால் கழுவி கழுவி ஊத்துறாங்க… மனம் உடைந்த லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு…

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் கடந்த மாதம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கிக் கொண்டிருந்தாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. இப்படத்தையடுத்து, இயக்குனர் லோகேஷ் ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோஷியல் மீடியாவை விட்டு விலகுவதாக தெரிவித்து உள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் சோஷியல் மீடியாவை விட்டு விலகுவதற்கு லியோ படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணமா என்றெல்லாம் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.ஆனால், சோஷியல் மீடியாவை விட்டு விலகுவதற்கான காரணத்தையும் லோகேஷ் இப்போது கூறியிருக்கிறார். அவரது பதில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எதற்காக சோஷியல் மீடியாவிலிருந்து விலகுகிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம். மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் லோகேஷ். இவர் விறுவிறுப்பான திரைக்கதை எழுதுவதில் திறமை வாய்ந்தவர். இவர் நடிகர் கார்த்தியை வைத்து எடுத்த கைதி படம் இவருக்கு எதிர்பாராத வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இவரது பிலிம் மேக்கிங் திறமையைப் பார்த்து திரையுலகப் பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் ஆச்சரியப்பட்டனர். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து, தனக்கு மிகவும் பிடித்த நடிகரான உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்தார். இப்படம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் அடித்தது.

எனவே, விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு கம் பேக் படமாக அமைந்தது. கைதி படத்தில் நடித்த முக்கிய காதாப்பாத்திரங்கள் சில விக்ரம் படத்தில் தோன்றியதால் LCU என்ற கான்செப்ட் ரசிகர்கள் மத்தியில் பிரபலாமாகத் தொடங்கியது. இதனாலேயே, விஜய்யின் லியோ படமும் LCU வில் இருக்கிறதா இல்லையா என்ற ஆர்வம் பலருக்கும் இருந்தது. இப்படி தன் திறைமை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க உள்ளார். மேலும், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும், இப்படம் LCU வில் இல்லை என்றும், ரஜினியின் வில்லத்தனம் தனக்கு பிடிக்கும் என்பதால் அதனை இப்படத்தில் முழுமையாக பயன்படுத்த உள்ளதாக வும் பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் ரஜினி காந்த் இப்போது ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், ‘தலைவர் 171’ படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக லோகேஷ் கூறியுள்ளார்.

மேலும், கதை எழுதுவதில் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக அடுத்த ஆறு மாதத்திற்கு சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே, லியோ படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர் இதே போல் சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.