லியோ படத்தின் முழு கதை லீக் அவுட் … கதி கலங்கி நிற்கும் விஜய் மற்றும் லியோ பட குழுவினர்

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதால், இந்த படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் இருந்து வருகிறது, ஆனால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் ஒன்றான லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை நடத்தமுடியாமல் போக, கடும் அப்செட்டில் இருந்து வருகிறது லியோ படக்குழு. இந்நிலையில லியோ படத்தை ப்ரோமோஷன் செய்ய மாற்று வழி என்ன என்பது பற்றி யோசித்து வருகிறது லியோ படக்குழு.

எப்படி ஏற்கனவே கடும் அப்செட்டில் இருந்து வரும் லியோ படக்குழுவுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது லோகேஷின் முந்தைய படங்களை போலவே லியோ படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாகவும், ஆக்சன் மற்றும் திரில் காட்சிகள் நிறைந்த படமாகவும் உருவாகியுள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ள நிலையில்,

லியோ படத்தில் ஒரு நடிகர் பட்டாளத்தையே களமிறக்கியுள்ள இயக்குனர் லோகேஷ், படம் குறித்த அப்டேட்களை வெளிவிடாமல் படு சீக்ரட்டாக படத்தை எடுக்க முயற்சித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், படத்தில் நடித்த சில நடிகர்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் குட்டிகுட்டி அப்டேட்களை வெளியிட்டு வந்தனர்.

இதனால் அப்சட்டான லோகேஷ், லியோ படம் குறித்த அப்டேட்டை யாரும் சோஷியல் மீடியாவில் வெளியிடக்கூடாது எனப் பல கண்டிஷன்களையும் போட்டிருந்தார். இப்படி படத்தை ரசிகர்கள் தியேட்டரில் என்ஜாய் பண்ணி பார்க்கணும் என்பதற்காக படத்தின் அப்டேட்டை கூட வெளியிடாமல் பொத்தி பொத்தி வைத்திருந்த லோகேஷ் கனகராஜுக்கு மட்டுமில்லை ஒட்டு மொத்த லியோ படக்குழுவுக்கும் அதிர்ச்சி உண்டாக்கும் வகையில்,

இது தான் லியோ படத்தின் முழுக் கதையும் லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது, அக்டோபர் 19ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முழுக்கதையும் லீக் ஆகி விட்டதாக வெளியான தகவல்கள் படக்குழுவினர் அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, லியோ படத்தின் ஸ்னாப்சிஸ் என சொல்லப்படும் படத்தின் காட்சிகளை கொண்ட விபரங்கள் திடீரென சமூவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, அதில், விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகிய மூவரும் அண்ணன் என்ற விபரம் முதல் விஜய் அவர்களிடமிருந்து விலகி காஷ்மீரில் ஒரு காபி ஷாப் வைத்திருப்பதும், அங்கு மனைவி திரிஷாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் விஜயை தேடி அண்ணன்கள் அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் குரூப் வருவதாகவும், அதாவது காஷ்மீரில் பேக்கரி கடை மற்றும் காப்பி ஷாப் வைத்து விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

படத்தில் விஜய்யும் திரிஷாவும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள். விஜய்க்கு படத்தில் பெயர் பார்த்திபன். அப்போது ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பலால் பிரச்சனையை ஏற்படுகிறது. அவர்களுடன் விஜய் மோதும் படி சூழல் உருவாகி மோதலும் நடக்கிறது. இதற்கிடையே விஜய்க்கும் ஏற்கனவே ஒரு கேங்குக்கும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து தனது அடையாளத்தை மறைத்து தான் காஷ்மீரில் காபி ஷாப் வைத்து வாழ்ந்து வந்திருப்பார்.

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனையால் விஜய்யின் இருப்பிடம் அவரின் முன்னால் எதிரிகளுக்கும் தெரியவரும் அப்போது பிளாஸ் பேக் ஒன்று செல்லும் அதனை தொடர்ந்து இரண்டு கும்பலையும் விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை என்ற தகவல் தான் இணையத்தில் பரவிவரும் நிலையில் இது தான் லியோ படத்தின் உண்மையான கதையா என்பது படம் வெளியான பின்பு தான் அனைவர்க்கும் தெரியவரும்.