முத்துவிடம் உண்மையை சொன்ன ஜீவா… கையும் களவுமாக மாட்டிய ரோகினி… சிறகடிக்க ஆசையின் அடுத்த ட்விஸ்ட்…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். மனோஜ் ரோகிணியின் அப்பா 15 லட்சம் ரூபாயை என்னுடைய பெயருக்கு அனுப்பி வைத்தார் என்று சொன்னதைக் கேட்டு முத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஒரு வழியாக சமாளித்து விட்டார் ரோகிணி, இருந்தும் முத்துவுக்கு சந்தேகம் போகவில்லை.

இதனை தொடர்ந்து ரோகிணி மனோஜிடம் என்ன செய்கிறா என்று கேட்க உலகத்தில் இருக்கிற பணக்காரங்க எப்படி முன்னுக்கு வந்தாங்க என்று பார்க்கிறேன் என்று சொல்ல, அதற்கு ரோகிணி யாரையும் பார்த்து எதுவும் பண்ண வேண்டாம். நாமாக என்ன பண்ண முடியுமோ அதைத்தான் பண்ணனும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். பிறகு மனோஜ் பணத்தை வட்டிக்கு கொடுப்போமா என்னுடைய பார்க் நண்பன் சொன்னான் என்று கேட்க,

அதற்கு ரோகினி யோசித்து விட்டு பிஏவுக்கு காசு கொடுக்க இதுதான் வழி என்று சரி நானே உன்னிடம் முதலில் வாங்குகிறேன். எனக்கு ஒரு லட்ச ரூபாய் வட்டிக்குதா என்று கேட்டு 2000 ரூபாயை அனுப்பி வைத்துவிட்டு ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்கிறார். அதோடு பார்த்தியா நீ இருந்த இடத்திலே 2000 ரூபாய் சம்பாதிச்சுட்ட என்று மனோஜ்க்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்.

இதனை தொடர்ந்து ஜீவா, கனடா போவதற்காக முத்துவுக்கு போன் பண்ணி ட்ராப் பண்ணுவதற்கு அழைக்கிறார். முத்துவும் ஜீவாவை தன்னுடைய வாடகை காரில் அழைத்து கொண்டு ஏர்போர்ட்டில் ட்ரோப் செய்ய செல்கிறார். அங்கே ஜீவா காரில் இருந்து இறங்கியதும், என்னிடம் கையில் பணம் இல்லை உங்கள் phone payக்கு அனுப்புகிறேன் நம்பர் சொல்லுங்க என கேட்க. ஆனால் முத்து அக்கவுண்டில் ஏதோ பிரச்சனை இருப்பதால் பணம் ட்ரான்ஸ்பர் ஆகாமல் போய்விட்டது.

உடனே வேறு யாராவது தெரிஞ்சவங்க அக்கவுண்ட் நம்பர் இருந்தால் சொல்லுங்க என ஜீவா கேட்கிறார். நான் அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன் என்று ஜீவா சொல்கிறார். உடனே முத்து, மனோஜ்க்கு போன் பண்ணி அக்கவுண்ட் நம்பரை கேட்டு அதை ஜீவாவுக்கு கொடுத்து அனுப்ப சொல்லுகிறார். ஏற்கனேவே ஜீவா 30 லட்சம் அனுப்பிய மனோஜ் அக்கௌன்ட்ம் இதுவும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதை பார்த்து ஷாக் ஆன ஜீவா. இந்த அகௌண்ட் நம்பர் யாருடையது என விசாரிக்கிறார்.

முத்துவும் தன்னுடைய அண்ணனுடையது, வேலை வெட்டி இல்லாம இருந்தான் அவங்க மாமனார் 15 லட்சம் அனுப்பி வைத்துள்ளாராம், இன்னும் 15 லட்சம் அனுப்ப போகிறாராம். அதான் அவனும் அந்த பார்லர் அம்மாவும் ஓவர் ஆட்டம் போடுறாங்க. ஆனால் எங்க அப்பாவிடம் திருடிட்டு போன 28 லட்சத்தை திருப்பி தரேன் சொல்லிட்டு இன்னும் தராமல் ஏமாற்றிட்டு இருக்கான் என முத்து தெரிவிக்க.

ஜீவா நடந்த உண்மையை முத்துவிடம் தெரிவிக்கிறார். அதாவது உங்க அண்ணன் தான் என்னை ஏமாற்றி விட்டார், அவரை ஏமாற்றி நான் ஓடவில்லை, என்னிடம் இருந்த அவருடைய 28 லட்சம் பணத்தை வட்டியும் முதலுமா 30 லட்சமாக திருப்பி கொடுத்துவிட்டேன் என தெரிவிக்க, முத்து ஷாக் ஆகிறார். நீங்க கொடுத்த பணத்தை தான் பார்லர் அம்மா அப்பா மலேசியாவில் இருந்து அனுப்பியதாக பொய் சொல்லுகிறானா என்று தெரிவிக்க, இதன் பின்பு முத்து என்ன செய்ய போகிறார் என்பது தான் அடுத்தடுத்து வரும் நாட்களில் மிக பரபரப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது.