அஜித்தை சந்திக்க கூட முடியாது வெங்கட்பிரபு… செம்ம டென்ஷனில் அஜித்.. என்ன செய்துள்ளார் வெங்கட் பிரபு தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய முதல் படம் சென்னை 600028 நல்ல ஹிட் கொடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இயக்குனர் என்கிற அங்கீகாரம் பெற்று தந்த படம், இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர் வெங்கட் பிரபு, பொது இடங்களில் கூட தன்னுடைய இமேஜ் பற்றி கவலை படாமல், வித்தியசமாக இவருடைய தம்பி பிரேம் ஜி உடன் இணைந்து எதாவது செய்து அனைவரையும் சிரிக்க வைக்க கூடியவர் வெங்கட் பிரபு.

இவரை போன்றே இவருடைய படங்களிலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. பத்து வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா, இந்த படத்தின் வெற்றி குறித்து இன்றும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய ஹிட் கொடுத்த முக்கியமான படங்களில் ஓன்று மங்காத்தா, இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு.

பொதுவாக வெங்கட்பிரபு நகைச்சுவை உணர்வுடன் பேசி பழகக்கூடியவர்,இது அஜித்துக்கு மிகவும் பிடித்து போனதை தொடர்ந்து, மங்காத்தா படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரங்களில் வெங்கட்பிரபு அடிக்கும் ஒவொரு லுட்டியையும் அஜித் ரசித்து சிரித்து மகிழ்துள்ளார். மேலும் மங்காத்தா படம் வெளியான பின்பு இயக்குனர் வெங்கட்பிரபுவை கொண்டாட தொடங்கிய அஜித் ரசிகர்கள் மங்காத்தா 2 எப்ப அஜித்தை வைத்து எடுக்க போறீங்க என தொடர்ந்து அஜித் ரசிகர்கள் தொந்தரவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார் வெங்கட் பிரபு, அப்போது உடன் மற்றொரு இயக்குனர் ஒருவரும் இருந்துள்ளார். சிறிது நேரம் பேசிவிட்டு வெங்கட் பிரபு ஒரு புகைப்படம் எடுக்க அஜித்திடம் கேட்க உடனே அஜித் ஓகே சொல்லியுள்ளார், அஜித் பக்கத்தில் நின்று வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்து கொண்டார், அதே போன்று அங்கே இருந்த மற்றோரு இயக்குனரும் அஜித்துடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டார்.

புகைப்படம் எடுத்த உடனே அங்கிருந்து புறப்பட்டு வெளியில் வந்த வெங்கட் பிரபு, அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதனை தொடர்ந்து மங்காத்தா 2 படம் தொடங்க இருப்பதாக பரபரப்பாக ஒரு தகவல் பரவியது, பொதுவாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் அஜித் உடன் புகைப்படம் எடுத்து கொண்டால் அவரிடம் கேட்டு தான் வெளியிடுவார்கள், ஆனால் வெங்கட் பிரபு அவர் விருப்பத்துக்கு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்,

தொடர்ந்து இது மங்காத்தா 2 படத்துக்கான சந்திப்பு என செய்திகள் பரவ செம்ம டென்ஷன் ஆகியுள்ளார் அஜித். மேலும் சமீபத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இனைந்து படம் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்தது, மேலும் அஜித்தை கோபம் அடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து தன்னுடைய மானேஜரை தொடர்ப்பு கொண்டு இது குறித்து பேசிய அஜித்குமார்,

என்ன இது, இவர்களின் சுய விளம்பரத்துக்கு எதற்காக என்னை தேவையின்றி பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், என வெங்கட் பிரபு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இனி அஜித்தை நேரில் கூட வெங்கட் பிரபு சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மங்காத்தா 2 படத்துக்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் தாய்லாந்தில் நடந்த உச்சக்கட்ட சண்டை… என்ன காரணம் தெரியுமா.?