பண விவகாரத்தில் கடைசி நேரத்தில் புத்தியை காட்டிய ராஜமௌலி…. அதிர்ச்சியில் சமுத்திரக்கனி… என்ன நடந்து.?

0
Follow on Google News

இயக்குனர் பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய சமுத்திரக்கனி தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தவர். உன்னை சரணடைந்தேன் மற்றும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான நெறஞ்சமனசு ஆகிய படங்கள் மூலம் இயக்குரான சமுத்திரக்கனி இயக்கத்தில் முதல் இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

தான் இன்னும் கற்று கொள்வது அதிகம் இருக்கிறது என்பதை தோல்விக்கு காரணத்தை புரிந்து கொண்டு, இயக்குனரில் இருந்து மீண்டும் உதவி இயக்குனராக அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் பணியாற்றினார்.மேலும் தொடர்ந்து குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது, இதனால் அடுத்தடுத்த அவருக்கான குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்நிலையில் மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்த சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து அவார்டுகளை அள்ளி குவித்தது. இப்படி ஒரு பக்கம் இயக்குனராகவும் மறுபக்கம் குணசித்திர வேடங்களிலும் கொடி கட்டி பறக்க தொடங்கிய சமுத்திரக்கனி இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, ஆனால் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் RRR படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ராஜமௌலியிடம் இருந்து அழைப்பு சமுத்திரக்கனிக்கு வந்துள்ளது. உங்களை சந்தித்து கதை சொல்ல விரும்புகிறேன் என ஒரு குறிப்பிட்ட தேதி அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற விஷயங்களை எனது உதவியாளர் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார் என ராஜமௌலி தொலைபேசியில் சமுத்திரக்கனியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ராஜமௌலியின் உதவியாளரிடம் இருந்து அழைப்பு வருவதை எதிர்பார்க்காமல், தன்னுடைய சொந்த செலவில் விமான டிக்கெட் மற்றும் ஆந்திராவில் தங்கும் ஓட்டல் புக்கிங் செய்துள்ளார் சமுத்திரக்கனி. இந்நிலையில் ராஜமௌலியை சந்திப்பதற்கான முதல் நாள் ராஜமொழியின் உதவியாளர் சமுத்திரக்கனியை தொடர்புகொண்டு, உங்களுக்கு நாளை வருவதற்கு எந்த விமானம், தங்குவதற்கு எந்த ஓட்டல் தேவை என கேட்க.

அதற்கு, சமுத்திரக்கனி பரவாயில்லை நானே டிக்கெட் மட்டும் ஹோட்டல் புக் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சமுத்திரக்கனியிடம் கதை சொல்லி முடித்த பின்பு, இந்த படத்தில் நடிக்க உங்களுக்கு சம்பளம் எவ்வளவு வேண்டுமென ராஜமௌலி கேட்டுள்ளார். அதற்கு சமுத்திரக்கனி உங்கள் படத்தில் நடிப்பதே எனக்கு பெரிய பாக்கியம், அதனால் நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என தெரிவித்துவிட்டார் சமுத்திரக்கனி.

RRR படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு சமுத்திரக்கனியிடம் அவர் நடித்த சம்பளத்திற்கான காசோலை ஒன்றை ராஜமௌலி உதவியாளர் கொடுத்துள்ளார். அந்த காசோலையை வாங்கி பார்த்த சமுத்திரக்கனி மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். அவர் வாழ்நாளிலேயே எதிர்பார்க்காத சம்பளத் தொகையான ரூபாய் 2 கோடிக்கான காசோலை சமுத்திரக்கனியிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

உடனே ராஜமௌலியை தொடர்பு கொண்ட சமுத்திரக்கனி உங்கள் படத்தில் நான் நடித்ததே பெரிய பாக்கியம், இந்த சம்பளம் எனக்கு அதிகம் என தெரிவிக்க, அதற்கு இது உங்கள் உழைப்புக்கும் திறமைக்கு கொடுத்த ஊதியம் என ராஜமௌலி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து RRR படத்தில் சமுத்திரக்கனி நடித்த பின்பு தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் பெருமளவு குவிந்து வரும் நிலையில், ராஜமௌலி மகன் கார்த்திகேய தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சமுத்திரக்கனியை தொடர்பு கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கதை கேட்ட சமுத்திரக்கனி ராஜமௌலி மகன் படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் நடிக்க ராஜமௌலி மகன் கார்த்திகேயா சம்பளம் எவ்வளவு என சமுத்திரக்கனி இடம் கேட்க, அதற்கு சமுத்திரக்கனி, உங்கள் தந்தை படத்தில் நடித்த பின்பு எனக்கு தெலுங்கு சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் வருகிறது, மேலும் உங்கள் தந்தை படத்தில் நடித்ததற்கு அதிக சம்பளம் கொடுத்து விட்டார்கள்.

ஆகையால் நான் உங்கள் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அந்தக் கடமைக்கு பலனாக உங்கள் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கின்றேன் என சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ராஜமௌலி மகன் தன்னுடைய படத்தில் நடிக்க சமுத்திரக்கனிக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளத்திற்கான காசோலை சமுத்திரக்கனியிடம் கொடுத்துள்ளார்.