என்ன படம் எடுக்குற.? ஒழுக்கமற்ற சமூகத்தை உருவாக்குவதே பா.ரஞ்சித் தான்… நார் நாராக கிழித்த பிரபல தாயாரிப்பாளர்..

0
Follow on Google News

இயக்குனர் பா.ரஞ்சித்தை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வரக்கூடியவர் பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர், இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ஜாதி பார்க்கவில்லை என்று சொல்லுவான் அவனிடம் உன்னுடைய ஊரில் ஏன் சேரி பிரிந்து கிடக்கிறது என்று கேளுங்கள்.?

உன் ஊர் பக்கத்தில் இருக்கும் சேரி ஏன் உன் ஊருடன் இதுவரை சேராமல் இருக்கிறது, அது சேருவதற்கு உன் தாத்தா விடம், உன் பெரியப்பாவிடம் உன் அம்மாவிடம், உன் அக்காவிடம் யாரிடமாவது சண்டை போட்டு சேர்த்து வைத்து வாடா என பேசிய பா.ரஞ்சித் மேலும், நம்மை சுற்றி இருக்கும் நிலம் யாருடைய நிலம் என அந்த கேள்வியை நான் கேட்கும் பொழுது, ஏன் நிலம் என்னிடம் இல்லை, ஏன் என்னிடம் இருந்த பஞ்சமி நிலம் பிடுங்கிவிட்டீர்கள். ஏனென்றால் அதில் ஜாதி இருக்கின்றது எதைத் தொட்டாலும் அதற்குள் ஜாதி உள்ளது என பேசிய பா.ரஞ்சித்.

மேலும் எங்கயோ சிறு கூட்டமா இருக்கும் மக்களை நீங்கள் ஒடுக்குவது மூலம், பெரிய பலசாலி என்று நினைத்து விட வேண்டாம், சண்டை என்பது சரிக்கு சமமாக நின்று செய்வது தன, நாங்க கதியை வெச்சு மாட்டு தோலை உரிப்போம் மனுஷன் தோலை உரிக்க மாட்டோம் என பா ரஞ்சித் பேசிய இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய தயாரிப்பாளர் சௌத்ரி தேவர்.

பா. ரஞ்சித்தை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை இருந்தாலும் ரஞ்சித் தொடர்ந்து பேசக்கூடிய கருத்துக்கள் என்னைப் போன்ற சமூகத்தினரை தாக்கி பேசுவது போன்று உள்ளது. சண்டை செய்வோம் என்கின்றார் பா. ரஞ்சித், சண்டை யாரிடம் செய்ய வேண்டும்.? சண்டை செய்யும் சூழ்நிலையில் இன்று சமூகம் இல்லை, அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம், அதில் போடா வாடா என்று ஒருமையில் என்னை குறிப்பிட்டு தான் பேசி உள்ளார் என தெரிவித்துள்ள சவுத்ரி தேவர்.

ஏனென்றால் பா ரஞ்சித்தை தொடர்ந்து எதிர்த்து வருவது நான் தான். அதனால் பா ரஞ்சித் என்னை தான் சொல்கிறார் என்பது எனக்கு தெரியும், பா ரஞ்சித் சண்டை செய்ய வேண்டும் என்றால் சவுத்ரி தேவரும் ரஞ்சித்தும் சண்டை செய்வோம், எதற்காக ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்கள் தேவையின்றி சண்டை செய்ய வேண்டும். நான் சண்டை செய்ய ரெடி பா ரஞ்சித் ரெடியா என சவால் விடுத்த சவுத்ரி தேவர்.

மேலும் மாட்டு தோலை உரிக்க கத்தி பயன்படுத்துவோம் அதை வைத்து மனுஷன் தோலை உரிக்க மாட்டோம் என பா ரஞ்சித் பேசுகிறார், வெள்ளைக்காரன் தோலையே கத்தி வைத்து உரித்த வீர பரம்பரையில் இருந்து வந்தவர்கள் நாங்கள், எங்களிடமும் கத்தி உள்ளது நாங்களும் கறிக்கடை வைத்திருக்கிறோம். ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருப்போம், எதற்காக சண்டை போட வேண்டும்.

எதற்காக பொய்யான கருத்துக்களை பா ரஞ்சித் பரப்பி மக்கள் மத்தியில் விஷத்தை விதைக்க வேண்டும், உங்கள் படத்திலேயே கூட பெண்களை அழைத்துச் சென்று போய் கர்ப்பமாக்கி விடு என்று காட்சிகள் வைத்து, ஒழுக்கமற்ற சமூகத்தை உருவாக்குவதில் பா ரஞ்சித்துக்கும் மாரி செல்வராஜுக்கும் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து எங்கள் சமூகத்தை கெட்டவர்கள் போன்று காட்சிப்படுத்துகிறீர்கள்.

சண்டை செய்வோம் கத்தி எடுப்போம் மாட்டு தோலை உரிக்க தெரிந்த எங்களுக்கு மனுஷன் தோலை தெரியாது.? இதெல்லாம் என்ன பேச்சு, ஓரளவுக்கு மேல் உயர்ந்து விட்டீர்கள் அதனால் நாகரிகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள், அந்த நாகரிகம் தான் உங்களுக்கு மரியாதையை பெற்று தரும் என பா ரஞ்சித்துக்கு அட்வைஸ் செய்துள்ள சவுத்ரி தேவர், மேலும் இனிமேல் இது போன்ற விஷமமாக பேசுவதை விட்டு விடுங்கள் இதுபோன்ற தொடர்ந்து பேசினால் இனிமேல் நீங்கள் படமே எடுக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு எதிர்ப்பு வரும் என கடுமையாக சௌத்ரி தேவர் எச்சரித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.