மைத்துனர் அருகில் ஆபாசமாய் பேசிய இயக்குனர் ஹரி.. அதிர்ந்து போன திரையுலகம்..

0
Follow on Google News

சென்னை : தமிழ்த்திரையுலகில் கமர்சியல் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருப்பவர் டைரக்டர் ஹரி. அவரது முதல் படமான தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகர் பிரஷாந்திற்கு கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தார். அதேநேரத்தில் வெளியான நடிகர் விஜய்யின் படத்தை விட இந்த திரைப்படம் பெரும் வசூலை வாரிக்குவித்தது.

அதைத்தொடர்ந்து சிங்கம்,சாமி என மாஸ் ஹீரோக்களுக்கு கமர்ஷியல் அந்தஸ்தை உயர்த்தியவர் டைரக்டர் ஹரி. ஹரியின் மச்சினனான நடிகர் அருண் விஜயை வைத்து படம் எடுப்பீர்களா என அப்போதே கேட்கப்பட்டது. பதிலளித்த ஹரி காலம் வரும்போது எல்லாமே கைகூடும் என ;பதிலளித்திருந்தார். அந்த நேரத்தில் அருண் விஜய்க்கு மார்க்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மச்சினன் அருண் விஜயை வைத்து யானை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஹரி. இந்த திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் அமைந்துள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் அருண்விஜய் நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குனர் ஹரி மற்றும் படக்குழுவில் உள்ள பலர் கலந்துகொண்டனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் குசும்பு பிடித்த பத்திரிகையாளர் ஒருவர் ” யானைக்கு கோபமும் வரும்.மதமும் பிடிக்கும். யானை என பெயர் சூட்டியிருக்கிறீர்கள். நாயகனுக்கு மதம் பிடிக்குமா” என கேட்டிருந்தார். இதற்க்கு பதிலளித்த டைரக்டர் ஹரி கொஞ்சம் உணர்ச்சிவசமாகவே பேசினார். படத்தில் வரும் அடிதடி காட்சிகளில் ஹீரோ அடிப்பது போன்ற காட்சியை குறிப்பிடுகையில் ஒரு உணர்ச்சிவேகத்தில் ஆபாச வார்த்தையை உதிர்த்தார்.

இதைக்கேட்ட அனைவரும் திகைப்புக்குள்ளாயினர். பின்னர் சிரிக்க ஆரம்பித்தனர். பத்திரிக்கையாளர்கள் மற்றும் நடிக நடிகைகள் சிரிப்பதை கண்ட டைரக்டர் ஹரி ” அய்யய்யோ மனசுல இருந்தத சத்தமா சொல்லிட்டேனா” என சமாளித்து சிரித்ததையடுத்து அனைவரும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர்.

டென்ஷனான கமல்ஹாசன்… மன்னிப்பு கேட்ட கவுண்டமணி..! பொது இடத்தில் இருவருக்கும் நடந்த மோதல் தெரியுமா.?