எந்த காலத்திலும் திருந்தாத சைக்கோ… பாலாவை வெளுத்து வாங்கிய முத்துமலர்… என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

பாலு மகேந்திரா உதவி இயக்குனராக பணியாற்றிய பாலா, சேது படத்தில் இயக்குனராக அறிமுகமானார், முதல் படமே மிக பெரிய ஹிட் கொடுத்து, யார் இந்த பாலா என ஒட்டு மொத்த சினிமாவும் பாலாவை நோக்கி திரும்பியது, தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என தன்னுடைய கொடூரமான படைப்புகளால் மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாலா, இவருடைய படைப்புகளுக்கு என தனியாக ரசிகர்கள் உண்டு.

அதே நேரத்தில் சைக்கோ போன்று செயல்படும் இவரின் படத்தில் நடிக்கும் நடிகர்கள், அந்த படத்தின் படப்பிடிப்பு எப்ப முடியும்,நமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று நாட்களை எண்ணி கொண்டு தான் இவருடைய படத்தில் நடித்து வருவார்கள், பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றவர்கள் தான் இவர் படத்தில் நடிக்க முன் வர முடியும், அதே நேரத்தில் திடிரென சைக்கோ போன்று நடிகர் நடிகைகளிடம் பாலா நடந்து கொள்வார்.

நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த அஜிகுமார் படத்தில் ஆரம்ப கட்ட வேலையின் போது பாலாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அந்த படத்தில் இருந்து விலகினார் அஜித், பிதாமகன் படத்தில் சிம்ரன் உடன் சூர்யா ஆடும் கட்சியில், நடுவில் இருக்கும் ஒரு கொடி கம்பத்தை சூர்யா சுற்றி வருவது போன்று காட்சியில், கமெராவை ஆன் செய்யாமலே பல மணி நேரம் சூர்யாவை சுற்ற வைத்து கொடுமை படுத்தியுள்ளார் பாலா.

இப்படி இவர் அவ்வவ்போது சைக்கோ போன்று நடந்து கொள்வார். இந்நிலையில் தற்பொழுது சூர்யா நடித்து அவருடைய சொந்த தயாரிப்பில் புதிய படம் ஒன்றை பாலா இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் பாலா குணம் அறிந்து அவருடைய படத்தில் நடிக்க தயங்கிய சூர்யா, தற்பொழுது தொடர் தோல்வியை சந்தித்துள்ள பாலாவுக்கு உதவும் வகையில் சொந்த தயாரிப்பில் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பு கொணடார், ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் சூர்யா – பாலா இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியில் நிற்கிறது படப்பிடிப்பு.

படப்பிடிப்பின் போது சூர்யாவை அதிக நேரம் ஓட விட்டதால் தான் இருவருக்கும் இடையில் பிரச்சனை உருவானது என தகவல் வெளியான நிலையில், படத்தில் படப்பிடிப்புக்காக வீடுகள் ரூபாய். 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது, படப்பிடிப்பு முடிந்ததும் இந்த வீட்டை மீனவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க சூர்யா முடிவு செய்திருந்தார். ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட இந்த வீடு இடம்பெறவில்லை.

மேலும் இது போன்று வீண் செலவுகளால் படத்திற்கு போட பட்ட முழு பட்ஜெட்டும், படத்தின் பாதி படத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாலாவுக்கு உதவி செய்ய முன் வந்த சூர்யாவை மன நிம்மதியில்லாமல் தவிக்க விட்டுவிட்டார் பாலா. இந்நிலையில் பாலாவை விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்ற முத்துமலருக்கு நடிகர் சூர்யா குடும்பத்தினர் மீது நெருங்கிய நட்பு உண்டு என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சூர்யா படும் கஷ்டத்தை கேள்விப்பட்டு, எந்த காலத்திலும் திருந்தாத சைக்கோ பாலா என்றும், இவருக்கு உதவி செய்ய வந்த சூர்யா அண்ணன் பாவம் என வேதனையுடன் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வரும் முத்துமலர், இந்த சைக்கோவிடம் இருந்து நான் தப்பித்து வந்ததே போதும் என பாலாவை வெளுத்து வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

போதையில் மிதக்கும் கீர்த்தி சுரேஷ்… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு… என்னாச்சு கீர்த்தி சுரேஷ்க்கு தெரியுமா.?