சூர்யாவை தொடர்ந்து பாலா – ஜோதிகா இடையே வெடித்த சண்டை …. அநாகரிகமாக பாலா என்ன பேசினார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவி முத்துமலரை சட்டப்படி விவகாரத்து பெற்று பிரிந்தார். மேலும் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான மூன்று படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது, இப்படி சினிமா மற்றும் வாழ்க்கை இரண்டிலும் மிக பெரிய பிரச்சனையை சந்தித்து வாழ்க்கையின் அடுத்தகட்டம் என்ன என்கிற ஒரு நிலை இல்லாமல் தவித்து வந்த இயக்குனர் பாலாவுக்கு உதவ முன் வந்தார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யாவை நந்தா படத்தில் மூலம் சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் பாலா, அந்த நன்றிக்காக இயக்குனர் பாலாவுக்கு ஏற்பட்ட சரிவில் இருந்து அவரை கை பிடித்து தூக்கி விடும் நோக்கில், பாலா இயக்கத்தில் நடிக்க முன் வந்த சூர்யா அந்த படத்தை சொந்த தயாரிப்பில் எடுக்கவும் முடிவு செய்தார். அடுத்தடுத்து சூர்யாவுக்கு படங்கள் வரிசையில் இருப்பதால் உடனே பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார், தந்தை மகன் வேடத்தில் நடிக்கும் சூர்யா, தந்தைக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது, மேலும் இந்த படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பது அதிகார்பூர்வமான தகவலும் வெளியானது. படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரில் சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்றது. மீனவர்கள் தொடர்பான கதை என்பதால் கன்னியாகுமரியில் கடல் நடுவே காட்சிகள் படமாக்க பட்டது.

இந்த படம் தொடங்கிய சில நாட்களில் அடிக்கடி பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா ஓடுவது போன்று காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவை வெயிலில் போட்டு பாலா வாட்டி எடுக்க, ஒரு கட்டத்தில் டென்ஷனான சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியிலே வெளியேறினார். இதனால் சூர்யா – பாலா இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது.

இந்நிலையில் பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில் மீதி படம் கோவாவில் தந்தை சூர்யாவுக்கான படப்பிடிப்பு எடுக்க இருந்தது, இதில் தான் ஜோதிகா நடிக்கும் காட்சியும் இடம் பெற இருந்தது. இந்நிலையில் சூர்யா – பாலா இடையில் சமரசம் செய்ய நடந்த பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் படம் பாதியிலே நின்றால் தயாரிப்பு நிறுவனமான சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு தான் மிக பெரிய நஷ்டம் என்பதால், சூர்யா ஒரு கட்டத்தில் இறங்கி வர தொடங்கினார்.

இதனை தொடர்ந்து எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையில் சூர்யாவும் விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்தார். ஆனால் நாட்கள் பல கடந்தும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணம், பாலா இன்னும் சமாதானமாகவில்லை என்பதால், இந்நிலையில் பாலாவை சமாதனம் செய்ய சூர்யா மனைவி ஜோதிகா பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது நடிகர் சூர்யாவை அநாகரிகமாக கடுமையாக பாலா பேசியதாக கூறப்படுகிறது.

ஆயிரம் தான் இருந்தாலும் சூர்யா தன்னுடைய கணவர் என்பதால் சூர்யாவை விட்டு கொடுக்காமல் பேசியுள்ளார் ஜோதிகா, இது பாலா – ஜோதிகா இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட, பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து, பாலாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாலா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த ஜோதிகா அந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?