தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது எச்சரித்த சமுத்திரக்கனி… என்ன செய்ய போகிறார்கள் கார்த்திக், சூர்யா இருவரும்…

0
Follow on Google News

நடிகர் கார்த்திக் நடித்த பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் தான் அந்த படத்தின் தயாரிப்பாளரும் ஆக இருந்துள்ளார். படம் எடுத்து முடிக்கும் தருவாயில் படத்தைப் பார்த்து அனைவரும் படம் வேற லெவல் இருக்கிறது பாராட்டி வந்துள்ளனர். இந்நிலையில் நிச்சயம் படம் மிக பெரிய லாபத்தை பெற்று தரும் என்பதை உணர்ந்து, தயாரிப்பாளர் கவுன்சிலில் அமீர் மீது புகாரை கொடுத்து பருத்திவீரன் மொத்த படத்தையும் கார்த்திக் உறவினர் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அமிரிடமிருந்து படத்தை பெற்றுக் கொண்டாலும் அந்த காலகட்டத்தில் அமீருக்கு ஒண்ணே கால் கோடி ரூபாய் பணம் கொடுத்துவிட்டு தான் படத்தை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் படத்தை தயாரிப்பு கவுன்சிலிங் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து அமீரிடம் இருந்து பெற்று அவர்கள் பெயரில் ரிலீஸ் செய்துவிட்டு. அமீருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை.

பருத்திவீரன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் தனக்கு சேர வேண்டிய பணம் அமீருக்கு வரவில்லை என்றதும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து உள்ளார் அமீர் , அந்த வழக்கு சுமார் 17 வருடங்களாகி இன்னும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமீர் – ஞானவேல் ராஜா குறித்த சர்ச்சை தற்பொழுது சினிமா வட்டாரத்தில் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் சிவக்குமார் இவருடைய உறவினர் ஞானவேல் ராஜா தொடர்ந்து இயக்குனர் அமீர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் சினிமா துறையில் உள்ள பலரும் வரிந்து கட்டி கொண்டு வந்து அமீருக்கு ஆதரவாக ஞானவேல்ராஜாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள், நடிகர் சமுத்திரக்கனி இது குறித்து ஞானவேல் ராஜாவை எச்சரிக்கும் வகையில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் பருத்தி வீரன் கால்வாசி படம்‌ நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க. என்னால தயாரிக்க முடியாது.. பணம்‌ இல்ல அப்படின்னு. சகோதரர்‌ சூர்யா வந்து “படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர்‌ அண்ணா” அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்‌. அதுக்குப் பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும்‌, அமீர்‌ அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள்‌, இப்படி ஒவ்வொருத்தர்‌கிட்டயும்‌ அவர்‌ சொல்லச்சொல்ல போய்‌ ஒரு லட்சம்‌, ஐம்பதாயிரம்‌, ரெண்டு லட்சம்‌ இப்டி வாங்கிட்டு வந்தவன்‌ நான்‌.

ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர்‌ சட்டையை போட்டுக்கட்டிங்க. உண்மையிலேயே யார்‌ தயாரிப்பாளர்‌..? சொல்லுங்க. இப்ப நான் சொல்லிருக்கிறது ஒரு சம்பவம் தான். இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும். இந்தமாறி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது” என நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் உறவினர் ஞானவேல் ராஜாவை எச்சரிக்கும் வகையில் தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.

மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் சசிகுமார், கவிஞர் சினேகன், இயக்குனர் கரு. பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் சுதா கொங்கரா என ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் வரிந்து கட்டி கொண்டு அமீருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை ஏன் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் வாய் திறக்காமல் மிக்சர் சாப்பிடுகிறார்கள். எப்ப தான் வாய் திறப்பார்கள் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் சிவகுமார் குடும்ப உறவினர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை பற்றி சர்ச்சைக்குறிய வகையில் பேசி, அது தற்பொழுது நடிகர் கார்த்திக், சூர்யா ஆகியோருக்கு எதிராக ஒவ்வொருவரும் கேள்வி கேட்கும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் எந்த விவகாரத்தில் கார்த்திக், சூர்யா இருவருக்கும் உச்சகட்ட அவமானத்தை ஞானவேல் ராஜா பெற்று தந்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.