பாலா – சூர்யா உச்சகட்ட மோதலால் வணங்கான் படத்தில் ஏ.எல்.விஜய் என்ட்ரி… பாலாவின் நிலைமை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் வணங்கான். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல், இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யா மிக பெரிய சிக்கலில் சிக்கி தவித்து வருகிறார்.

பாலா குணம் அறிந்த சூர்யா, இந்த படத்தின் பாலா மற்றும் சூர்யா இடையில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க படம் தொடங்குவதற்கு முன்பே சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கராவை வணங்கான் படத்தில் உதவி இயக்குனராக உள்ளே கொண்டு வந்த நடிகர் சூர்யா, இந்த படத்தில் தனக்கும் பாலாவுக்கு இடையில் எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லாமல் படத்தை முடித்து கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்தார் சூர்யா.

இருந்தும் இந்த படம் தொடங்கியது முதல் சூர்யா- பாலா இருவருக்கும் இடையில் தொடர்ந்து சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்து வந்தாலும் உதவி இயக்குரான சுதா கொங்கரா இருவருக்கும் இடையில் பேசி சரி செய்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில் வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், தன்னுடைய புதிய படத்துக்கான வேலையை தொடங்க மும்பை சென்றார் சுதா கொங்கரா.

இந்த சூழலில் சூர்யா – பாலா இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்ட, படப்பிடிப்பு பாதியிலே விட்டு வெளியேறி கன்னியாகுமரியில் இருந்து சென்னை விரைந்தார் சூர்யா. இதனால் படப்பிடிப்பு பாதியிலே நின்றது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பாலா -சூர்யா இடையில் நடந்த சமரச பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்து வந்தது. மேலும் இந்த படத்தில் நடிக்க இருந்த ஜோதிகா படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

இப்படி தொடர்ந்து வணங்கான் படம் சிக்கலில் சிக்க, இந்த படத்தை பாதியில் விட்டால், தயாரிப்பாளரான சூர்யாவுக்கு மிக பெரிய நஷ்டம் என்பதில், ஒரு கட்டத்தில் அவரே தானாக இறங்கி பாலாவிடம் சமரசத்துக்கு வந்ததை தொடர்ந்து இருவருக்கும் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு கோவாவுக்கு பதில் புதுசேரியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை வந்து இந்த படம் பாதியிலே நிற்க கூடாது என்பதற்காக, படத்தின் பாலா ஒரு அதிரடி முடிவு எடுத்து பட குழுவை அதிர செய்துள்ளார். அதாவது பாலாவுக்கு – சூர்யாவுக்கு இடையில் எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்க, இருவருக்கும் இடையில் ஒரு பாலம் போல் செயல்பட ஒருவர் வேண்டும் , அதற்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் இந்த படத்தில் உதவி இயக்குனராக உள்ளே கொண்டு வருவதற்கு திட்டமிட்ட பாலா.

சம்பந்தப்பட்ட ஏ.எல்.விஜய்யிடம் பேசியுள்ளார். அதற்கு ஏ.எல்.விஜய் ஓகே வும் சொல்லியுள்ளார். உடனே ஏ.எல்.விஜய் ஓகே சொன்னதற்கு காரணம் அவர் நீண்ட காலமாக பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என முயற்சி செய்து வந்தது தான் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஏ.எல்.விஜய் எந்த ஒரு விஷயத்தையும் பக்குவமாக கையாள கூடியவர் என்பதால். வணங்கான் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளது பட குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டெம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா கமிட்டாகி இருந்திருந்தார், அதனால் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது குறிப்பிடதக்கது.

மாணவி ஸ்ரீநிதி மாரணம்… சமூக போராளிகள் சூர்யா – ஜோதிகா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.?