ரச்சிதா குடும்பத்தில் சடுகுடு விளையாடிய விஷ்ணு… ஓ…தினேஷ் – ரச்சிதா பிரிவுக்கு இது தான் காரணமா.?

0
Follow on Google News

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழக்கம்.

அதனை பயன்படுத்தி பலர் வளர்ந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார்.

அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது. இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாடிய அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் தற்போது அவர் Fire என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவரின் கணவர் தினேஷ் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் எப்படியாவது ரசித்த விடம் இணைந்து விட வேண்டும் என்று தீர்க்கமாக உள்ளார்.அதேபோல் பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் அவரது முன்னாள் கணவர் தினேஷுடன் இனி சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதை ரச்சிதா தனது பதிவுகள் மூலம் மறைமுகமாக உணர்த்திவந்தார். மேலும் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மிரட்டல் விடுப்பதாகவும் ஆபாசமாகப் பேசுவதாகவும் தினேஷ் மீது போலீஸில் புகார் தந்தார் ரச்சிதா.

அந்தப் புகார் மனுவில், ‘என்னை மிரட்டுவது போல் சீரியல் நடிகர் விஷ்ணுவைக் கூட மிரட்டியிருக்கிறார் தினேஷ்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.ரச்சிதாவுடன் ஒரு சீரியல்ல ஜோடியா நடிச்சார் விஷ்ணு. அந்தச் சமயத்துலதான் ரச்சிதா பிக் பாஸ் சீசன் 6க்குப் போனாங்க. நிகழ்ச்சி முடிச்சு ரச்சிதா வெளியே வந்ததும் புதுசா கார், வீடு வாங்க விரும்பினாங்க. அந்தச் சமயத்துல அது தொடர்பான சில உதவிகளை அவருக்குச் செய்திருக்கார் விஷ்ணு.

இந்தத் தகவல் தினேஷுக்குத் தெரிய வந்ததும் விஷ்ணுவுக்கு அவர் போன் செய்திருக்கார். ஆனா ரச்சிதா சொல்லியோ என்னவோ தினேஷின் போனை விஷ்ணு எடுக்கவே இல்லை. மேலும் ரசித்தாவின் நெருங்கிய நண்பரான விஷ்ணு, ரசித்தா கதையை மட்டும் கேட்டு, ரசித்தாக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விஷ்ணு தான் தினேஷ் மேல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

அதனால் தான் வீட்டில் தினேஷ் மற்றும் விஷ்ணு அதிகமாக சண்டை போகிறார்கள் போன்றும் உள்ளது. விஜய் டிவியில் பிரபல சேரியலான ஆபீஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு. இவர் அதில் பல ரசிகர்களை கவர்ந்து வந்தார், பின்னர் ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் நடிகை ஆயிஷாவுடன் இனைந்து நடித்தார். இதில் அமுல் பேபி என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது பிக் பாஸில் உள்ளார். இவர் நிகழ்ச்சி உள்ளே செல்வதற்கே ரசித்தா தான் சிபாரிசு செய்தாராம்.