பிக் பாஸ் வீட்டுக்குள் புகை பிடிக்கும் பெண்கள்… அதுமட்டுமில்லையாம் இன்னும் என்னனெலாம் நடக்குது தெரியுமா.?

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக இருப்பவர் அர்ச்சனா தான். இந்த சீசன் 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்லும் இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் மோதல்கள் சற்று அதிகமாகவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி வெளியே சென்ற பிறகு ரசிகர்கள் அனைவரும் அர்ச்சனாவிற்கு தான் ஆதாரமாக இருந்தனர். அர்ச்சனா மட்டும் தான் பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்க கூடாது என கூறினார். அதன் காரணமாகவே ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு சப்போர்ட் செய்தனர். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்கள் அழு மூஞ்சாக தான் இருந்தார். அதிலும், இவர் உள்ளே சென்ற ஒரு சில நாளிலேயே இவரை மாயா ஒரு கோ டார்கட் செய்து Bully செய்து வந்தனர்.

ஆரம்பத்தில் அவர்களின் கேலிகளுக்கு அழுத அர்ச்சனா, பின்னர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து ஓட வைத்தார். இதனால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது.அர்ச்சனாவிற்கு சோசியல் மீடியாவில் தனி ஆர்மியே உருவானது. அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பட்டாசு போல் வெடித்து கொண்டிருக்கிறார். இவரால் தான் பிக் பாஸ் டிஆர்பியும் எகிறுகிறது.

இவருக்கு ஆதரவு இருந்து வரும் அதே வேளையில் சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதில் மிக முக்கியமாக இவரது புகைபிடிக்கும் பழக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இதில் ஆண்கள் அடிக்கடி செல்வதை விட பெண்கள் தான் அடிக்கடி செல்வதை வருகின்றனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனா தான் அடிக்கடி இந்த அறைக்குள் சென்று வருகிறார்.

இவர் செல்வது ,மட்டுமல்லாமல் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார். ஏற்கனவே ஒரு டாஸ்கின் போது விஷ்ணு, பூர்ணிமா, அர்ச்சனா ஆகிய மூவரும் ஒரே கயிற்றில் கட்டிப்போட பட்டனர். அப்போது அர்ச்சனா புகைபிடிக்கும் அறைக்கு சென்று புகைபிடித்துள்ளார். இது குறித்து விஷ்ணு ‘அர்ச்சனா புகைப்பிடிப்பதால் தன்னுடைய ஆரோக்யம் பாதிக்கப்படுகிறது என்று கமல் சாரிடம் செல்லப்போவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், டிரக் அடிப்பது போன்ற பழக்கமெல்லாம் அர்ச்சனாவுக்கு இருக்குது. அவரை பிக் பாஸ் வீட்டில் வைத்திருப்பதே ஆபத்து. நிறைய தடவை அவர் தனியாக எதையோ மறைத்து எடுத்துக்கொண்டு போவதை நிகழ்ச்சியில் பார்க்கிறோம்.

இருப்பினும் வழக்கம் போல் அவர்களுக்கு வேண்டிய போதைப்பொருள் கிடைக்கவில்லை என்றால், சைக்கோ போலவே நடந்து கொள்வார்கள். தேவை இல்லாமல் கத்துவார்கள், திடீரென்று அழுகுவார்கள், இதெல்லாம் அர்ச்சனாவிடமும் நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். கடந்த வாரம் விஷ்ணு என்றால், இந்த வாரம் நிக்சன்.

ஆண் போட்டியாளர்களுடன் வாயைக் கொடுத்து அவர்களை சூடேற்றி, கை நீட்ட வைப்பது தான் இவருடைய பிளான். அவர்கள் எப்போது என்ன மனநிலையில் இருப்பார்கள் என்றே தெரியாது. இந்த சீசனில் அப்படித்தான் அர்ச்சனாவும் நடந்து கொள்கிறார். இவர் பேசுறது, செய்றதை எல்லாம் ஊக்குவிக்காதீர்கள் என்று அர்ச்சனாவை குறித்து பரபரப்பான விஷயத்தை சமீபத்திய பேட்டியில் வனிதா கொளுத்தி போட்டுள்ளார்.