நம்பவைத்து பூர்ணிமாவுக்கு ஆப்பு வைத்த விஷ்ணு.. என்னை ஏமாத்திட்டான் கதறும் பூர்ணிமா..

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யார் சரி யார் தவறு என்று யூகிக்க முடியாத வகையில் தான் ஒவ்வொருவருடைய கேரக்டரும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சரவண விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டனர். இவர்களில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜோவிகா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டார். சமூக வலைதளங்களில் ஜோவிகா ஆர்மி உருவாக்கி ஆதரவாகப் பதிவிட்டனர். ஆனால் மாயா பூர்ணிமாவுடன் இணைந்ததால் ஓட்டு குறைந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். இந்த வார கேப்டன் ஆக விஷ்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்மால் பாஸில் அனன்யா, விஜய், பூர்ணிமா, நிக்சன், விக்ரம், ரவீனா ஆகியோரையும் பிரித்து போட்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக டீம் போட்டு விளையாடி வரும் மாயா – பூர்ணிமா, மணி – ரவீனா ஆகிய இரண்டு ஜோடியையும் தனி தனியாக பிரித்து இருக்கிறார் விஷ்ணு. அப்போதே பூர்ணிமா விஷ்ணு மேல் கடுப்பாகி விட்டார்.

பின் வீட்டில் பொறுப்பே இல்லை என்ற இரண்டு நபரை தேர்ந்தெடுத்து ஷாப்பிங்கிற்கு அனுப்புமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாயா மற்றும் அனன்யாவை விஷ்ணு தேர்தெடுத்தாதல் கடுப்பான மாயா ‘ நீங்கள் கேப்டன் ஆனதே ஒரு ஸ்டேட்டர்ஜி தான். நீங்கள் என்னையும் பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிறீர்கள் என்பது வரை நான் சொல்வேன் என்று கொந்தளித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து பூர்ணிமா மாயா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பூர்ணிமா, இந்த வாரம் ஜாலியா இருக்கலாம், பார்ட்டி பண்ணலாம் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், என்னை எல்லோரும் ஏமாத்துறாங்க. இந்த வாரம் என்டில் ஃபேவரிடிசம் பண்ணுறாங்கன்னு அவ்வளவு பேசினேன். ஆனால் உங்களுக்கு தான் ஸ்டார் கொடுத்தாங்க. மறுபடியும் மறுபடியும் என்னை ஏமாத்துறாங்க. என்னை யூஸ் பண்ணிக்கிறாங்க என்று எனக்கு தோன்றுகிறது என்று சொல்கிறார்.

உடனே மாயா, ஆமாம், நீ சொல்வது சரிதான் என்று அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார். இப்படி பூர்ணிமா புலம்பி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. பூர்ணிமா புலம்புவதற்கு காரணம் விஷ்ணு தான். கடந்த சில வாரங்களுக்கு முன் விஷ்ணு-பூர்ணிமா நன்றாக நெருக்கமாக பேசி இருந்தார்கள். ஆனால், கடந்த வாரத்தில் குறிப்பாக, பார்க்கிங் படக்குழு வந்து போனதில் இருந்து விஷ்ணு பூர்ணிமாவிடம் இருந்து விலகி இருக்கிறார். இதற்காக தான் பூர்ணிமா புலம்பி அழுகிறார்.

இந்த வாரம் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருகின்றனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் இதில் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் நிக்சன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆரம்பத்தில் சரியாக ஆடிய நிக்சன், ஐசுவுடன் சேர்ந்து எல்லை மீறியது இவர் மீது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இவர் பிரதீப் விஷயத்தில் மாயா குழுவுடன் சேர்ந்து திட்டம் போட்டு ரெட் கார்ட் கொடுத்தது, வினுஷாவின் உடல் அமைப்பை பற்றி கேலி செய்தது, அர்ச்சனாவை வாடி போடி என்று பேசியது என்று இவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கிறது. எனவே இவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் கடந்த வாரம் கேப்டனாக இருந்த நிக்சனை இந்த வாரம் அனைவரும் சேர்ந்து நாமினேஷன் செய்திருப்பது அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.