விஷ்ணு அம்மாவை பற்றி எப்படி விசித்ரா தப்பா பேசலாம்… பிக் பாஸ் வீட்டில் ஓவர் நாட்டாமை தனம் பண்ணும் விசித்ரா..

0
Follow on Google News

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் இவர்தான் என்று உறுதியாக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலை தான் இருக்கிறது. நாளாக நாளாக ஒவ்வொரு போட்டியாளார்களுக்கிடையே இருந்த போட்டிகளும் பொறாமைகளும் ஒரு கட்டத்தில் அதிகரித்து அது ஒவ்வொருத்தரையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கி வருகிறது.

யாரும் யாரையும் நம்புவதில்லை. இதில் பிக்பாஸ், டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொருத்தரின் சென்ஸிட்டிவான மனநிலையை குலைக்கும் விதமாக போட்டியாளருக்கு டாஸ்கையும் தருகிறார். போட்டியாளர்கள் ஒருநாள் நன்றாக இருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இவரா என்று சொல்ல வைத்து விடுகிறார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சில நெகட்டிவ் கருத்துகளை பெற்றிருந்தவர்கள் திடீரென்று நல்லவர்களாக ரசிகர்களின் மத்தியில் மாறிவிடுகிறார்கள்.

ஆனால் அதற்கு பிறகு திடீரென்று அவர்களுடைய உண்மை முகத்தை காட்டி ரசிகர்களை அதிர்ச்சி அடையவும் வைத்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒருவராகத்தான் இப்போது விசித்திரா மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் பூமராக பேசிக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிகமாக இருந்தது. அதுபோல பிரதீப்போடு ஆரம்பத்தில் அதிகமான சண்டை சச்சரவுகளில் விசித்திரா ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

பிறகு பிரதீப் வெளியே சென்றதும் திடீரென்று பிரதீப்புக்கு ஆதரவாக விசித்திரா பேசியது ரசிகர்களின் மத்தியில் அதுவரைக்கும் விசித்ராவுக்கு இருந்த நெகட்டிவ் இமேஜை உடைத்து விட்டது. இந்த நிலையில் ஒரு சில நாட்களாக விசித்திராவின் நடவடிக்கை ரசிகர்களின் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அர்ச்சனா பீரியட்ஸ் நேரத்தில் தனக்கு வயிறு வலிக்கிறது என்று பேசியதை குறித்து நேற்றைய டாஸ்க்கில் விமர்சித்து பேசியதை வைத்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விஷ்ணுவிடமும் அவருடைய அம்மா அப்பாவை பற்றி திட்டி இருக்கிறார்.

பிக் பாஸில் இந்த வார கேப்டனாக விஷ்ணு உள்ளார். சில நாட்களாகவே விஷ்ணு மற்றும் விசித்திராவிற்கு இடையே அடிக்கடி சண்டை முட்டி கொள்கிறது. அது போல டாஸ்க்கில் விசித்திரா நடிக்கிறார். எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. என் வயதிற்கு மரியாதை தர வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் மரியாதை கொடுக்கும் அளவிற்கு அவருடைய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விஷ்ணு பேசி இருந்ததுக்கு விசித்திரா அவரிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே விசித்திரா எனக்கும் பையன்கள் இருக்கிறார்கள். என்னுடைய பையன் எல்லாம் உன்ன மாதிரி கிடையாது. என் முகத்தை பார்த்தே பேச பயப்படுவாங்க. உன்னை உங்க அம்மா அப்பா இப்படி வளர்த்ததற்கு வெட்கப்படனும். அவங்களும் இந்த வீடியோவை பார்த்து கிட்டு தானே இருப்பாங்க. இப்படி மாத்தி மாத்தி நீ பேசுற என்று திட்டி இருக்கிறார். அதோடு என்னுடைய பையன்கள் எல்லாம் உன்ன மாதிரி கிடையாது என்றும் கூறியிருக்கிறார்..

விசித்ராவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பலரும் அவரை திட்டி வருகின்றனர். ஏற்கனவே மாயாவுடன் சேர்ந்ததால் அவர் ஆட்டம் மாறியுள்ளது. தற்போது இவ்வாறு பேசி அவர் பெயரை அவர் டேமேஜ் செய்து கொண்டே போகிறார். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக 5 பேர் மட்டும் நாமினேட் ஆகி உள்ளனர். வழக்கம் போல அர்ச்சனா, விசித்ரா, நிக்சன், மணி மற்றும் தினேஷ் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் நிக்சன் மற்றும் விசித்திராவின் ஓட்டுகளே குறைவாக இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் அதிகளவு ஓட்டுக்களை போட முடியாமல் போயுள்ளதால், இந்த வாரம் யாரும் எலிமினேஷன் கிடையாது என பிக் பாஸ் டீம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன் வையுங்க என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.