சூழ்ச்சி செய்யும் அர்ச்சனா… அவ மட்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரட்டும்… கொந்தளித்த வனிதா..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்லும் இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் மோதல்கள் சற்று அதிகமாகவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் ஆக்சன் படம் போட்டு காட்டப்பட்டது. பெரும்பாலான ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை வனிதா youtube சேனல் ஒன்றில் பேசிய போது அர்ச்சனாவை விளாசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக இருப்பவர் அர்ச்சனா தான். பிக் பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய போது, அர்ச்சனா மட்டும் தான் பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்க கூடாது என கூறினார். அதன் காரணமாகவே ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு சப்போர்ட் செய்தனர். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்கள் அழு மூஞ்சாக தான் இருந்தார்.

அதிலும், இவர் உள்ளே சென்ற ஒரு சில நாளிலேயே இவரை மாயா ஒரு கோ டார்கட் செய்து Bully செய்து வந்தனர். ஆரம்பத்தில் அவர்களின் கேலிகளுக்கு அழுத அர்ச்சனா, பின்னர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து ஓட வைத்தார். இதனால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது. எனவே கமல்ஹாசன் வரும் நாட்களில் அர்ச்சனாவுக்கு தொடர்ந்து கைதட்டல்கள் கிடைத்து வந்தது. அர்ச்சனாவிற்கு சோசியல் மீடியாவில் தனி ஆர்மியே உருவானது. அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பட்டாசு போல் வெடித்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு ஆதரவு இருந்து வரும் அதே வேளையில் சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அர்ச்சனாவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதாக நடிகை வனிதா ஏற்கனவே வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் அர்ச்சனாவை சீண்டி பார்க்கும் வகையில் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகை வனிதா கூறி இருந்ததாவது; “நேற்று காட்டப்பட்ட குறும்பட மூலம் இரண்டு போட்டியாளர்களின் முகத்திரை கிழித்திருக்கிறது.

ஒன்று விஷ்ணு இன்னொருவர் அர்ச்சனா. விஷ்ணுவை எடுத்துக் கொண்டால் அவர் எந்த இடத்தில் எப்படி நடந்து கொண்டான் எந்த வார்த்தைகளை பயன்படுத்தினான் உள்ளிட்ட அனைத்தும் படத்தில் வெளிவந்திருக்கிறது. அதேபோல அர்ச்சனாவின் உண்மை முகமும் வெளியே தெரிந்து விட்டது.
அதேபோல அர்ச்சனாவே கேம் சேஞ்சர் என்று சொல்கிறார்கள். பொதுவாக கேம் சேஞ்சர் என்றால், ஒரு நிகழ்ச்சி சுமாராக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் ஒருவர் அந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றுவார்.

அவரைத்தான் நாம் கேம் என்று சொல்வோம். ஆனால் அர்ச்சனா, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நாசம் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். அர்ச்சனா எந்த அளவிற்கு சுயநலவாதி டிராமா காரி சூழ்ச்சி செய்யக்கூடியவர் என்பது அந்த படத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு விட்டது.
அர்ச்சனா இந்த கேமை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமா அந்த அளவுக்கு பயன்படுத்தி, தான் தனியாக தெரிய வேண்டும் என்று மற்ற போட்டியாளர்களை காலி செய்து இருக்கிறார்.

நான் இதனை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன். அர்ச்சனா வெளியே வந்தாலும் அதை அவள் மூஞ்சி மேலே சொல்வேன். அவள் ஆடியது போல் ஏமாற்றுத்தனமான கேமை இதுவரை நான் எந்த சீசனிலும் பார்த்ததில்லை.எனக்கு இது பயங்கரமான கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.காரணம் என்னவென்றால் இது மிக மிக தவறான விஷயம்.” என்று வனிதா கொந்தளித்து பேசியுள்ளார்.