பிக்பாஸ் secret ரூமில் சஞ்சனா… என்ன நடக்கிறது பிக் பாஸில்..

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் 24 மணி நேரத்தில் ஒருவர் வெளியேற வேண்டும் என்கிற நாமினேஷன்லில், ஒருவர் இந்த வீட்டில் 24 மணி நேரத்தில் ஏன் நீங்க வெளியேறக்கூடாது. எதற்காக நீங்க தொடர்ந்து பிக் பாஸ் வீட்ல இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு போட்டியாளரிடம் கருத்து கேட்கப்படுகிறது. அப்போது ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் சஞ்சனாவிடம் நீங்கள் ஏன் 24 நேரத்தில் இந்த வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

எதற்காக தொடர்ந்து பிக் பாஸில் இருக்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு சஞ்சனா விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையிலே பேசுகிறார். அதாவது இந்த வாரத்தில் யாராவது ஒருவர் நாமினேட் பண்ணி தான் ஆக வேண்டும். அதில் குறிப்பாக எப்படியும் ஒரு பெண் நாமினேட் ஆக போகிறார், அதில் நானாக இருந்து விட்டு செல்கிறேன் என்று சஞ்சனா விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் பேசுகிறார்.

எப்ப வேண்டுமானாலும் நான் வெளியேறுவதற்கு ரெடியாக இருக்கிறேன் என்றும் சஞ்சனா தெரிவிக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே சஞ்சனா ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார் என்று பலரும் குழம்பி போய் உள்ளார்கள். ஆனால் சாஞ்சனா வீட்டை விட்டு வெளியே போவதற்கு நான் ரெடி என்று சொன்னதற்கு குறுக்கிட்டு தீபக்,இங்க பாருமா நீ கேள்வியவே புரிஞ்சுக்க மாட்டேன்ற, உன்னை ஏன் வெளியே போக வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.

நீ ஏன் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு என்ன காரணம் என்று தான் கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்று தீபக் பேசுகிறார். ஆனால் சஞ்சனா இல்லனா, பெண்களால்தான் இந்த பிரச்சனையே ஆரம்பமானது, அதனால் யாராவது ஒரு பெண் தானே இங்கிருந்து வெளியேற வேண்டும். அதில் நானாக இருந்து விட்டு போகிறேன் என்று என்று பெருந்தன்மையாக சாஞ்சனா பதில் அளிக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே வந்து ஒரே நாளில் சஞ்சனா வெளியேறுவதற்கு காரணம் முதல் நாளில் ஜாக்லின் நடத்திய கலவரம் இவருக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியதா, அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகத்தான் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் இது போன்ற சம்பவம் எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் சாஞ்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பார்.

ஆனால் வந்து ஒரே நாளில் நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்வதெல்லாம் ஏன் என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. தீபக் எவ்வளவோ சஞ்சனாவை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்கிறார். இந்த பிக் பாஸ் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கல, உனக்கு கிடைச்சிருக்கு. இது சரியா பயன்படுத்திக்க என்று தீபக் தெரிவிக்க. அதற்கு சஞ்சனா இதுவரை நான் சிங்கிள் பெட்டில் படுத்ததில்லை. நான் டபுள் பெட்டியில் தான் படுத்து இருக்கிறேன்.

ஆனால் இந்த வீட்டில் எனக்கு சிங்கிள் பெட் கிடைச்சிருக்கு, அதனால் நான் இந்த வீட்டில் இருக்க ஆசைப்படுகிறேன் என்று சஞ்சனா தெரிவிக்கிறார். என்னடா இந்த சின்ன பொண்ணு எல்லாத்தையும் போட்டு குழப்புதே என்று தலையை சொறிகிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றவர்கள். மேலும் சஞ்சனா வெளியே போக வேண்டும் என்று முடிவு செய்த பின்பு அவரை இதுக்குமேல் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தான் பிக் பாஸ் அவரை வெளியேற்ற முடிவு செய்திருக்கலாம்.

மிக வயது குறைந்த பெண் சஞ்சனா அவரை கட்டாயப்படுத்தியும் பிக் பாஸ் வீட்டில் தங்க வைக்க முடியாது அதனாலேயே சஞ்சனா விருப்பப்படி வெளியே பிக் பாஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பார். அதே நேரத்தில் பலரும் சீக்ரெட் ரூமில் சஞ்சனா தங்க வைக்கப்படுவார் என்று பேசப்படுகிறது ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here