கமல் மீதும் பிக் பாஸ் மீதும் வழக்கு…. இழுத்து மூட படுகிறதா பிக் பாஸ் நிகழ்ச்சி…

0
Follow on Google News

கடந்த சனிக்கிழமை பிரதீப்க்கு Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டு இருந்ததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என விமர்சனம் எழுந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் பிற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருகிறார்கள். இதனால் சில பேர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப்க்கு முத்திரை குத்தி வெளியில் அனுப்பிவிட்டார்கள் என்று பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து தொகுப்பாளர் கமல்ஹாசன் இந்த வாரம் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை என்றால் அவரது அரசியல் நிலைக்கே ஆபத்து வந்துவிடும்.

மேலும், ஜோவிகா இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே நன்றாகத்தான் விளையாடிக் கொண்டு வந்தார். வனிதா போல் இல்லை ஜோதிகா திறமையாக விளையாடி வருகிறார். தன்னுடைய வயசுக்கும் மீறி பொறுமையாக நடந்து கொள்கிறார் என்றெல்லாம் பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இவர் புல்லி கேங் என்று சொல்லப்படும் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்யும் வேலைகள் தான் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது.

குறிப்பாக, இவர் பிரதீப் வெளியேறியதற்கு காரணமாகி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதோடு கடந்த வாரம் எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியதும் ஜோவிகா தான் முதலில் பேசி இருந்தார். ஜோவிகா, பிரதீப் மீது இருந்த கோபத்தில் தான் இப்படியெல்லாம் பேசி இருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஜோவிகா அம்மா வனிதா இது குறித்து கூறுகையில்,

மக்களை தூண்டிவிடுவதற்காகவே பொய்யான ஒரு காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். விசித்ரா பிளான் பண்ணி தான் கேம் விளையாடுகிறார்கள். பிரதீப் வெளியேற்றப்பட்டபோது விசித்ரா கமலிடம் கேட்டு இருக்கலாம். அப்போது ஏன் கேட்கவில்லை. இந்த வாரம் கண்டெண்ட் வேண்டும் என்பதற்காக தான் விசித்ரா அப்போது கேட்காமல் இருந்து இருக்காங்க. விசித்ரா டெண்டுல்கர் அளவுக்கு சூப்பர் கேம் விளையாடுகிறார்.

என் மகள் ஜோவிகா பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசவே இல்லை. நான் வழக்கு தொடர்வேன். என் பொண்ணுக்கு 18 வயசு. அவ வந்து கேஸ் போடுவாள். எதன் அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு என்று கூறி ரெட் கார்டு கொடுத்தீங்கனு அவ கேட்பா. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லை என்றால் நான் அவதூறு வழக்கு தொடர்வேன். கமல் சார் தான் பெண்கள் பாதுகாப்பு என பேசினார் என வனிதா ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் என் மகள் பிளான் பண்ணி தான் பிரதிப்பை வெளியேற்றினார் என்றும் சிலர் வீடியோ பரப்பி வருகிறார்கள். இது என்னுடைய மகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த ரெட் கார்ட் விவகாரம் குறித்து கண்டிப்பாக கமல் இந்த வாரம் பேசி ஆகவேண்டும். இல்லை என்றால் நானே இல்லை என் மகளோ கமல் மீது வழக்கு தொடுப்போம். இந்த விவகாரத்தில் என்னுடைய மகளின் பெயர்தான் அதிகமாக அடிபடுகிறது. அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் கமல் ஹாசன் இது குறித்து கண்டிப்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான் சட்டம் படிக்கவில்லை என்றாலும் சட்டம் குறித்து எனக்கு எல்லாமே தெரியும் என கூறியிருக்கிறார் வனிதா. அதனால் சட்டப்படி வனிதாவுக்கு விளக்கம் அளிப்பார்களா இல்லை அவதூறு வழக்கை எதிர்கொள்வார்களா என்று தெரியவில்லையே. இப்படி ஒரு கேஸ் வரும் என்று கமல் ஹாசனும், பிக் பாஸும், விஜய் டிவியும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.