பெண்கள் பாத்ரூம்ல்ல முத்துக்குமரன்.. கத்தி கூச்சலிட்ட பெண்.. பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன் அட்ராசிட்டி ஓவர்

0
Follow on Google News

விசு நடித்த சம்சாரம் மின்சாரம் படத்தில் வருவது போன்று ஒரு வீட்டிற்குள் கோடு போட்டு, இந்த கோட்டை தாண்டி நீ இந்த பக்கம் வரக்கூடாது, அந்த கோட்டை தாண்டி நான் இந்த பக்கம் வரமாட்டேன் என்பது போன்று பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு கோட்டை கிழித்து இந்த கோட்டுக்கு இந்த பக்கம் ஆண்கள் அணியினரும், இந்த கோட்டிற்கு அந்தப் பக்கம் பெண்கள் அணியினரும் என பிரிக்கப்பட்டு, பெண்கள் அணியினர் இந்த கோட்டை தாண்டி இந்த பக்கம் வர கூடாது.

அதேபோன்று ஆண்கள் அணியினர் இந்த கோட்டை தாண்டி அந்த பக்கமும் செல்லக்கூடாது என்பது தான் பிக் பாஸ்ன் விதி, இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8-ல் ஆரம்பத்திலேயே டிஆர்பி ரேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக, நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் சஞ்சனாவை எலிமினேட் செய்தது பிக் பாஸ், ஆனால் எதிர்பார்த்த டிஆர்பி கிடைக்கவில்லை, இப்படி நிகழ்ச்சியை அடுத்தடுத்து பரபரப்பை ஆக்குவதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது பிக் பாஸ்.

அதில் முதல் கட்டமாக பெண்கள் வீட்டிற்குள் ஒரு ஆணையும், ஆண்கள் வீட்டிற்கு ஒரு பெண்ணையும் அனுப்பி தன்னுடைய நாரதர் வேலையை தொடங்கி இருக்கிறது பிக் பாஸ். இந்த நிலையில் பெண்கள் வீட்டிற்கு சென்றுள்ள முத்துக்குமரன் என்பவர் யார் என்கின்ற பேச்சு தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பேசுகிறார் பேசுகிறார் பேசிக்கொண்டே இருக்கிறார். அதாவது கவுண்டமணி நகைச்சுவை காட்சியில் வரும் போது ஐயோ இவரா பேசிய கொண்று விடுவானே என்று கவுண்டமணி ஓடுவது போன்று,

முத்துக்குமரனின் பேச்சு அப்பப்ப போதும் நிறுத்துப்பா என்று சொல்லும் அளவிற்கு பேசிக் கொண்டே இருக்கிறார். முத்துக்குமரன் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், அதன் பின்பு தொகுப்பாளராக அறியப்பட்டவர், ஒருமுறை வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக முத்துக்குமரன் சென்ற போது அங்கே அவருடன் சென்றவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்துள்ளார்.

தத்துவம், அரசியல் என ஒரு 60 வயது முதியவர் பேசுவது போன்று பேசி அங்கே அவர் உடன் சென்றவர்கள் அப்பப்ப போதும்யா எங்கள விடு என்று சொல்லும் அளவிற்கு பேசிப் பேசியே அவர்களை வெறுப்படைய செய்ததாக முத்துக்குமாருடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது, இப்படி பெண்கள் வீட்டிற்கு முத்துக்குமார் அனுப்ப வைக்கப்பட்டதின் நோக்கம் எப்படியும் அங்கே இருக்கும் பெண்களிடம் பேசிப் பேசியே வெறுப்படைய செய்து விடுவார் என்பதற்காக தான் அவர் பெண்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது திடீரென்று நான் மழையில் தியானம் செய்யப் போகிறேன் என்று சொல்லுகிறார் முத்துக்குமரன், எப்பா கொடுத்த காசுக்கு மேல கூவறான்யா என்ற காமெடி போல் கொடுத்த காசுக்கு நடிங்கப்பா அதுக்கு மேல பிக்பாஸ் வீட்டுக்குள் நடிக்காதிங்கப்பா என்கின்ற சொல்லும் அளவிற்கு முத்துக்குமரனின் அட்ராசிட்டி எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பெண்கள் வீட்டிற்குள் சென்ற முத்துக்குமரன் பெண்கள் பாத்ரூம் சென்று ஒவ்வொரு பாத்ரூம் கதவை தட்டி யாராவது உள்ளே இருக்கிறீர்களா.? யாராவது உள்ளே இருக்கிறீர்களா.? என்று கேட்கிறார் அப்போது ஒரு கதவை தட்டும் பொழுது ஒரு பெண் பாத்ரூம் உள்ளே இருந்து நான் இருக்கிறேன் என்று கூச்சலிட ,அங்கிருந்து அலறிக்கொண்டு வெளியே ஓடி வருகிறார் முத்துக்குமரன்.

இதற்கு முக்கிய காரணம் கடந்த சீசனில் பிரதீப் பெண்கள் பாத்ரூமில் எட்டிப் பார்க்கிறார், அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதீப் வெளியேற்றப்பட்டது போன்று முத்துக்குமரனும் வெளியேற்ற பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் இப்படி பாத்ரூம் உள்ளே செல்வதற்கு முன்பு உள்ளே யாராவது இருக்கிறீர்களா என்று எச்சரிக்கையுடன் தட்டுகிறார்.

ஒருவேளை பெண்கள் பாத்ரூம் உள்ளே மறதியால் தாழ்ப்பாள் போடாமல் கூட உள்ளே இருந்து விட்டால் அது தனக்கு மிகப்பெரிய பிரச்சனையாகி விடும், அந்த வகையில் மிகவும் எச்சரிக்கையாக தான் இதுபோன்று முத்துக்குமரன் செயல்படுகிறார் என்பதை பார்க்க முடியுது. அதே நேரத்தில் முத்துக்குமரன் பேசி பேசி காதில் ரத்த வர வைத்து விடுகிறார் என்கின்ற ஒரு விமர்சன குறித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here