சுக்கு நூறாக உடையும் மாயா கேங்…. மாயாவுக்கு ஓவரா கூஜா தூக்கும் பிக் பாஸ்..

0
Follow on Google News

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 42 நாட்களை கடந்து இருக்கிறது. முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது.போன வாரம் சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. மேலும், பிரதீப் தரப்பில் இருந்து எந்த ஒரு வாதத்தையும் கேட்காமல் அவரை கமலஹாசன் வெளியேற்றியது ரொம்ப தவறு என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள்.

இதனை அடுத்து சனிக்கிழமை எபிசோடில் கூட மாயா, பூர்ணிமா, ஜோதிகா, ஐசுவை பார்த்து கமல், நீங்கள் வைத்த குற்றசாட்டுகள் எல்லாம் உண்மை தானா? நான் ரெட் கார்ட் கொடுக்கவில்லை. அதற்கான அங்கீகாரம் உங்களிடம் தான் இருந்தது. நீங்கள் நினைத்திருந்தால் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் என்று இன்று சாரமாறியாக கமல் வெளுத்து வாங்கி இருந்தார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக தினேஷ் தேர்வாகி இருக்கிறார். ஐந்து வாரங்களாக மாயா, பூர்ணிமா போன்றவர்களின் கேப்டன்சியில் பிக் பாஸ் வீடு இருந்தது. தினேஷ் கேப்டன் ஆன கையோடு பிக் பாஸ் வைத்த செக் ரொம்பவும் மோசமானதாக இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்குவதற்கு முன்பே இந்த முறை இரண்டு வீடு என கமலஹாசன் அறிவித்திருந்தார்.

அதன்படி அந்தந்த வாரம் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்து தர வேண்டும். இதுவரை இந்த விதி இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த மாயா, பூர்ணிமா, ஜோதிகா போன்றவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்த தினேஷ், அர்ச்சனா, விசித்ராவை தரைக்குறைவாக நடத்தினார்கள்.

நாங்கள் கேட்டால் நீங்கள் சமைத்து தர வேண்டும், நாங்கள் சொல்லும் வேலையை மறுக்காமல் செய்து ஆக வேண்டும் என அடுக்கடுக்காக கட்டளையிட்டார்கள். அடுத்த வாரம் கேப்டன்சியில் ஜெயித்த பிறகு, நம்ம எல்லாரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போய்விடலாம் என மாயா மற்றும் பூர்ணிமா திட்டமிட்டு இருந்தார்கள். அந்தத் திட்டத்தில் மண்ணை அள்ளி போடும் விதமாக தினேஷ் நேற்று கேப்டன்சி டாஸ்க்கில் ஜெயித்தார்.

இவர்கள் தினேஷிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ், மாயா கூட்டணிக்கு மொத்தமாக ஜால்ரா தட்டிவிட்டார். இந்த வாரம் யாருமே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போக வேண்டாம் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மாயா கேங் கூண்டோடு காலியாகும் என எதிர்பார்க்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதையடுத்து நாமினேஷன் பிராசஸ் நடந்தது. பலர் நாமினேட்டாகி உள்ள நிலையில்.பூர்ணிமாவும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரத்திலும் மாயா ஹேங்கில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் TRP ரேட்டிங்காக மாயா கேங்ல் இருக்கும் பூர்ணிமாவை காப்பாற்ற பல தில்லாலங்கடி வேலையை பார்க்கலாம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.