திருந்தாத கமல்ஹாசன்… மாயா கேங் க்கு தொடர்ந்து ஆதரவாக செயல்படும் கமல்ஹாசன்… செம்ம டென்ஷனில் ரசிகர்கள்…

0
Follow on Google News

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். கடந்த மாதம் பிக் பாஸ் 7 ஆவது சீசன் தொடங்கிய நாள் முதல், போட்டியாளர்களின் சுவாரஸ்யமான வரிசையுடன் ஒவ்வொரு முறையும் விளையாட்டில் ஒரு புதிய திருப்பத்துடன் வருகிறது. பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமான போட்டியாளராக பார்க்கப்பட்டவர் பிரதீப்தான்.

அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரிக்கவே அவரிடம் உள்ள சில குறைகள், அவர் பேசும் விதம், வார்த்தைகளை வைத்து பெண்களுக்கு அவரால் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை கொண்டு வந்தது மாயா, பூர்ணிமா குழு. இவர்கள் சக போட்டியாளர்களை சேர்த்துக்கொண்டு பிரதீபுக்கு எதிராக அணி சேர்த்தனர். கடந்த வாரம் இவர்கள் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க எபிசோடில் கமல்ஹாசனும், பிரதீபை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற சொன்னார்.

பிரதீப்புக்கு ஆதரவாகவும், கமல்ஹாசன், மாயா, பூர்ணிமா ஆகியோருக்கு எதிராகவும் பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த வாரம் முழுவதுமே பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்டது தொடர்பாகவே விவாதங்கள் தொடர்ந்துகொண்டு இருந்தன. சமூக வலைதளங்களிலும் கமல்ஹாசனுக்கு எதிரான பதிவுகள் அணிவகுத்தன.

இந்த நிலையில் இந்த சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளிலும் பிரதீப் வெளியேற்றத்தை தொடர்ந்து வீட்டில் மாயா அணிக்கும் – விஜே அர்ச்சனா அணிக்கும் இடையிலான மோதலே முக்கிய பேசுபொருளாக இருந்தது.
அதோடு பிரதீப் மீது வைக்கப்படும் புகார்கள் பலவற்றிற்கு ஆதாரம் இல்லாதது, முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருப்பதும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வார இறுதியில் இதற்கான கேள்விகளை கமல்ஹாசன் எழுப்பினார்.

ஆனாலும் அவர் அங்கே எடுக்கப்பட்ட முடிவை ஆதரிக்கும் விதமாகவே பேசினார். முக்கியமாக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. நாங்கள் ரெட் கார்டு ஆப்ஷன் கொடுத்தோம். அவர்கள்தான் அதை பயன்படுத்தினார்கள். மற்றபடி நாங்கள் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை என்று கமல் ஹாசன் நாசுக்காக விலகிக்கொண்டார் . சமூக வலைத்தளங்களில் தன் மீது விழுந்த அடிக்கு பதிலடி தராமல்..

அவர் ஒதுங்கிக்கொண்டார். அதே சமயம் மாயாவிடம் கமல்ஹாசன் கரிசனம் காட்டுகிறார். அவர் மிகவும் தன்மையாக நடந்து கொள்கிறார். கோபம் அடைவது இல்லை. வலிக்காது.. வலிக்காது பொறுமையா என்று சொல்வது போல மிகவும் அன்பாக தட்டிக்கொடுக்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது
வார இறுதியில் பிரதீப் வெளியேற்றப்பட்டது பற்றிய கேள்விகளை கமல்ஹாசன் மாயா உள்ளிட்டோரிடம் எழுப்பினார்.

ஆனாலும் அவர் அங்கே எடுக்கப்பட்ட முடிவை ஆதரிக்கும் விதமாகவே பேசினார். மேலும் கமல்ஹாசனின் விக்ரம் 2ல் அவர் நடிக்க உள்ளார். விக்ரம் 1ல் வந்துவிட்டு சென்றாலும் விக்ரம் 2ல் அவர் கமல் டீமில் நடிக்க உள்ளார். அதேபோல் எல்சியூவில் உள்ளார் . அப்படி இருக்க அவரிடம் மிக மோசமாக நடந்துகொள்வது சரியாக இருக்காது. அவரை கடுமையாக பேசுவது சரியாக இருக்காது.

அதோடு படத்திலும் கமலுடன் மாயா சகஜம் ஆகிவிட்டார். இதுதான் கமல் மாயாவை கண்டிக்காமல் மேம்போக்காக விட காரணமாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்ப்பது இல்லை என்றும், அதனால்தான் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் கூறுகிறார்கள்.

அநாகரிகமாக நடந்துகொண்ட மாயா, ஜோவிகாவையும் அவர்களுக்கு எதிர்வினையாற்றிய விசித்ரா, விஜே அர்ச்சனாவையும் கமல்ஹாரன் ஒரே தட்டில் பார்த்து வீக் என்ட் எபிசோடில் அறிவுரை செய்ததை பலரும் ரசிக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆனால் வாரம் முழுக்க மாயா, பூர்ணிமா தலைமையில் நடந்த சமபவங்கள் தொடர்பான விசாரணையின்போது ஆடியன்ஸிடமிருந்து எழுந்த கைதட்டல்களைக் கண்டு ஒருகணம் மாயா குரூப் ஆடிபோனது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.

ஆனாலும் இந்த வாரம் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றும் தெரிகிறது. ஏனெனில் கமல்ஹாசன் எப்போதும் அவர்கள் பக்கம் தான் இருக்கிறார். கமல்ஹாசன் எனக்கு செல்லப் பிள்ளைகள் யாரும் இல்லை என்று கூறினாலும் அவர்களைச் செல்ல பிள்ளையாகவே நடத்துகிறார் என்றும் பலர் கமண்ட் செய்து வருகின்றனர்.