மூக்குடைபட்ட ஜோவிக்கா… அனைவரும் முன்பு மன்னிப்பு கேட்ட பரிதாபம்.. தேவைதானா இது.?

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கின்றது. இந்த சீசன் துவங்கிய ஒரு சில நாட்களிலேயே போட்டியாளர்கள் இடையே கடுமையான மோதல்கள் வெடிக்க துவங்கின. இதுவே ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்க்க ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக இந்த சீசன் துவங்கிய முதல் வாரத்தில் விசித்ரா மற்றும் ஜோதிகா இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பேசும்பொருளாக மாறியது.

படிப்பு தொடர்பாக இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் ஜோவிகாவிற்கு ஆதரவாகவும், ஒரு சிலர் அவரை விமர்சித்தும் பேசி வந்தனர்.வனிதாவின் மகள் ஜோவிகா தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றார். விசித்ரா மற்றும் பிரதீப்புடன் மோதலில் ஈடுபட்ட ஜோவிகாவிற்கு ஒருபக்கம் ஆதரவும் மறுபக்கம் விமர்சனமும் எழுந்து வருகின்றது.

சக ஆண் போட்டியாளர்களை ஜோவிகா அவன் இவன், வாடா போடா என அழைத்துப்பேசி வருவதை ரசிகர்கள் பலர் விரும்பவில்லை.‌ இதனால் ஜோவிகாவை இணையத்தில் ஒரு சில ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்வில் ஜோவிகா – விஷ்ணு விஜய் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. அதில் பேசும் ஜோவிகா, “தன்னை சுயபுத்தி இல்லாதவர் என சொல்கிறார்கள். அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கமும் ஏற்புடையதாக இல்லை” என தெரிவிக்கிறார்.

உடனே பேசும் விஷ்ணு விஜய், “உனக்கு எப்படி பேசவே தெரியாது. ஜாக்கி தான் போட தெரியும். நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா?.. வாடா, போடான்னு சொல்றீயே.. உனக்கு ஒரு லிமிட் இருக்கும் போது, மத்தவங்ககிட்ட அது இல்லையா.. ஒருவாட்டி தான் சொல்வாங்க. நீ இவன், அவன்னு சொல்றீயே.. நான் உன்னை என்ன வாடி, போடின்னு சொல்றனா.. உனக்கு எல்லாருமே இங்க எளக்காரமா தான் இருக்குது.. ஒருத்தர்கிட்ட எப்படி பேச வேண்டும் என தெரிந்து கொண்டு பேசு.. இடம் பொருள் ஏவல் தெரிஞ்சு பேசு.. எல்லோரும் உங்க வீட்டுல வேலை செய்யல” என உண்டு இல்லை என கண்டிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜோவிகா என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாகிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், விஷ்ணு சரியாதான் கேள்வி கேட்குறாரு என அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கின்றதா ? இல்லையா ? என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மேலும் விஷ்ணுவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது.

மேலும் சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் பேசும் ஜோவிகாவை ஆண்டவர் கண்டிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தங்களின் கோரிக்கை நிறைவேறுகிறதா என்பதை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலை வெளியாகியிருக்கும் முதல் ப்ரொமோ வீடியோவில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் கேப்டன் விக்ரம் பற்றி பேசியிருக்கிறார் கமல் ஹாசன்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்காக நாமினேடானவர்களில் மாயா தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஏனென்றால் மாயா செய்து வரும் காரியங்கள் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகின்றது. அவரும் பூர்ணிமாவும் தான் ரசிகர்கள் இடையே அதிக விமர்சனங்களை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த வாரம் நாமினேட் மாணவர்களில் குறைவான வாக்குகளை மாயா தான் பெற்றுள்ளார்.

எனவே அவர் கண்டிப்பாக வெளியேறிவிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என தகவல்கள் வந்தன. ஏனென்றால் இந்த வாரம் பாவா செல்லத்துரை தானாக வெளியேறிவிட்டதன் காரணமாக எலிமினேஷனை எலிமினேட் செய்தது பிக் பாஸ். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிலர் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் மாயா தப்பித்துவிட்டார். இதையடுத்து ரசிகர்கள் பலர், ஆண்டவரே தயவு செய்து எலிமினேஷன் இல்லை என சொல்லிவிடாதீர்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.