கிழிந்தது ஜாக்லின் முகத்திரை… பிக் பாஸ் வீட்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்த சாச்சனா…

0
Follow on Google News

தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் வீடு – பெண்கள் வீடு என தனித்தனியாக பிரித்து உள்ளார்கள் இதில் தற்போது ஒரு டாஸ்க் வைத்தார்கள், அதாவது அந்த டாஸ்க்ல் பெண்கள் வீட்டிலிருந்து ஒருவர் ஆண்கள் வீட்டுக்கும், ஆண்கள் வீட்டில் இருந்து ஒருவர் பெண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். இந்த டாஸ்கை சொன்னதும் ஜாக்லின் நான் போகப் போகிறேன் என்று துள்ளி குதிக்க சுனிதா மற்ற போட்டியாளர்கள் எல்லாம் ஜாக்லீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உடனே ஜாக்லின் கோபப்பட்டு ஏன் நான் போகக்கூடாதா என்று கொந்தளிக்க அவர் கோபப்பட்ட பின்பு மேலும் ஜாக்கிலினுக்கு எதிர்ப்பு அதிகரித்தது. உடனே கோவப்பட்டு சரி நான் போய் பெட்டில் படுத்து கொள்கிறேன் என்று ஜாக்குலின் சென்று விட்டார். அதற்கு சுனிதா நீ பெட்ல படு இல்ல வெளியில படுப்பையோ.! ஆனால் இந்த டீமுக்கு நல்ல பெயர் வாங்கி கொடு என்று தன்னுடைய தாய் மொழியான ஆசாம் மொழியுடன் கலந்து கொஞ்சி பேசியது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் 24 மணி நேரத்தில் சாட்சனா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது எல்லாமே செட்டப் தான் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க என்ன செய்வது என்று திட்டமிட்ட பிக் பாஸ் குழுவினர், கடந்த சீசனில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த பின்பு தான் அந்த சீசனின் பரபரப்பாக பேசப்பட்டது. பிரதீப் மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டு பிக் பாஸ் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது.

அந்த வகையில் 24 நேரத்தில் சாட்சனாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றும் பட்சத்தில் பிரதிபுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு பரபரப்பு ஏற்படும் என்று தான் எதிர்பார்த்து பிக் பாஸ் ப்ரொடக்ஷன் டீம் சாச்சினாவை வெளியேற்றுவதற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்தார்கள். அந்த வகையில் இது அனைத்துமே செட்டப் தான் என்றும், அதே நேரத்தில் சாட்சனா ஒயில் கார்டு மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவார் என்று கூறப்படுகிறது.

அதாவது சாச்சனாவை நீ இப்ப வெளியே போமா, மீண்டும் உன்னை வயல்காடு மூலம் வந்து விடுவா என்று சொல்லி தான் பிக் பாஸ் குழுவினர் அவரை வெளியேற்றினார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பேட்மேன் ரவீந்திரன் இதற்கு முன்பு பண மோசடி வழக்கில் சிறை சென்று வெளியே வந்த பின்பு பேட்டி ஒன்றில் தன்னை பற்றி பேசி இருப்பார்.

அதில் தான் ஒரு துணை இல்லாமல் எந்திரிக்க கூட முடியாது என்றும் அதாவது பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் கூட ஒரு துணை இல்லாமல் என்னால் செல்ல முடியாது என்று ஒரு பேட்டி ஒன்றிலே தன்னை பற்றி வெளிப்படையாக பேசியிருப்பார். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயே அவருடைய நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது ஒரு துணை இல்லாமல் உண்மையிலே எதுவுமே செய்ய முடியாது என்று உணர வைக்கிறது.

டாஸ்கில் கலந்து கொண்ட ரவீந்திரனுக்கு மூச்சு வாங்குவதை டிவியில் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பாவம்யா அந்த மனுசன விட்டுடுங்கப்பா என்று பரிதாபப்பட வைக்கும் வகையில் இருந்தது. பிக் பாஸ் வீட்டில் சாப்பிடும் அறையில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு அவரால் எந்திரிக்க முடியாமல் கஷ்ட நிகழ்வும் அரங்கேறியது. சாப்பிட்டு எந்திரிக்க முடியவில்லை என்றதும் அங்கு சுற்றி இருந்தவர்கள் குண்டு கட்டாக தூக்கி உதவி செய்து அவரை எழுப்பி விடுவார்கள்.

அதன் பின்பு அவரை ஒரு சிலர் குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு பெட்டில் போடுவதை பார்க்கின்றவர்களுக்கு எதற்கு ரவீந்திரனுக்கு இந்த வேலை அப்படி இவர் பிக் பாஸ் ஷோவில் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் கலந்து கொள்ள வேண்டுமா.? அல்லது வேற ஆட்களே கிடைக்கலையா ஏன் பிக் பாஸ் ப்ரொடக்ஷனில் இவரை பிக் பாஸ் போட்டியாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்று பலரும் விவாதம் செய்து கொண்டிருக்கையில் ரவீந்திரன் தான் இந்த பிக் பாஸ் சீசனை தூக்கி நிறுத்தப் போகிறார் என்பது போகப் போக பலருக்கு தெரிய வரும். அதே நேரத்தில் வயல் கார்டில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் வருவதற்கு காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here