ரவீந்திரனிடம் செம்மதியா வாங்கிய ஜாக்லின்… ஜெப்ரியிடம் முக்குடைபட்ட முத்துக்குமார்…

0
Follow on Google News

பிக் பாஸ் இந்த சீசனில் பாய்ஸ் டீம் கேர்ள்ஸ் டீம் என இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு, அதில் பாய்ஸ் டீமுக்கு பவித்திர அனுப்பப்பட்டுள்ளார். நான் பாய்ஸ் டீமுக்கு சென்றாலும் உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவேன் என்று பவித்ரா கேல்ஸ் டீமிடம் உறுதி அளித்துவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு பாய்ஸ் டீமில் இருந்து மூன்று பேரும் கேர்ள்ஸ் டீமில் இருந்து மூன்று பேர் செல்ல வேண்டும்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பர்சேஸ் அமெண்டை விட 250 ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்தால் 25 சதவீதம் எடுத்த பொருட்களை பிடித்து விடுவோம் என்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் எடுத்தால் மொத்த பொருட்களையும் பிடுங்கி வைத்து விடுவோம் என பிக் பாஸ் ரூல்ஸ் போட்டுள்ளார். பாய்ஸ் டீம் கேர்ள்ஸ் டீம் இருவரும் சென்று ஸ்டோர் ரூமில் பர்சேஸ் செய்கிறார்கள், இதில் தர்சா குப்தா இருந்த மொத்த உப்பையும் கேர்ள்ஸ் டீமுக்கு அள்ளிப் போட்டுவிட்டார்.

அதனால் பாய்ஸ் டீமுக்கு உப்பு இல்லை இதனை தொடர்ந்து ஜாக்லின் கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு உப்பு தருகிறோம் என்று பாய் ஸ்டீமுக்கு உறுதி அளிக்கிறார், அதையும் அந்த டீம் நம்பி விட்டார்கள், இப்படி உப்பை வைத்து பிக்பாஸில் கிரியேட் பட்ட கண்டன் சப் என்று முடிந்து விட்டது. அதாவது பெண்கள் இருக்கும் பகுதிக்கு ஆண்கள் சொல்லக்கூடாது. ஆண்கள் இருக்கும் பகுதிக்கு பெண்கள் சொல்லக்கூடாது என்கின்ற ஒரு ரூல்ஸ் உள்ளது.

ஆனால் கேப்டன் தர்ஷிகா நான் தற்போது கேப்டன் என்னுடைய டீமுக்கு தேவையான பொருட்களை நான் எங்க வேணாலும் சென்று எடுத்துக் கொள்வேன் என்று பிக் பாஸ் இடம் கேட்கிறார். அதற்கு பிக் பாஸ் அதெல்லாம் முடியாது உனக்கு தனிப்பட்ட முறையில் எது வேண்டுமானால் எடுத்துக்கலாம் ஆனால் உங்கள் டீமுக்கு வேண்டுமென்றால் அது எடுக்கக் கூடாது என்று மறுத்து விட்டார்.

இதனை தொடர்ந்து இடையில் புகுந்துஜாக்லின் அப்ப கேப்டனுக்கு என்ன பவரே இல்லையா என்று கேட்க, அதற்கு கேப்டனை யாருமே எளிமினேட் செய்ய முடியாதுல இந்த பவர் போதாதா என பேட்மேன் சரியான பதிலடி கொடுக்கிறார். இப்படி பிக் பாஸ் வீட்டில் வர்றவங்க போறவங்க எல்லாம் ஜாக்லினை போட்டு துவம்சம் செய்து வருவதை பார்க்க முடிகிறது. இறுதியில் அனைத்து காய்கறிகளும் வந்த பின்பு நாங்கள் உப்பு கொடுக்க மாட்டோம் என்று பெண்கள் அணியினர் பிடிவாதம் பிடிக்க.

அப்போ உங்க காய்கறிகள் எல்லாம் ஸ்டோர் ரூமில் தான் இருக்கிறது அதையும் நாங்கள் தரமாட்டோம் என பாய்ஸ் டீம் தெரிவிக்க அப்படியா எங்களுக்கு தர வேண்டாம், எங்களுக்கு சாப்பாடு வேண்டாம் என்று பெண்கள் அணியினர் தெரிவிக்கிறார்கள். பின்பு பெண்கள் அணியினர் பேசி சரி ஒரு வழியா நாங்கள் உப்பு தருகிறோம், எங்களுடைய பொருட்களை எல்லாம் கொடுங்கள்.

அது மட்டும் இல்லாமல் நாங்கள் தண்ணீர் பிடிக்க வரும்போது எங்களை அதை செய், இதை செய் என டார்ச்சர் பண்ண கூடாது என்று தெரிவிக்கிறார்கள். இதை கேட்ட பேட்மேன் என்னுடன் சம்மதம் கேட்டு தான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பது இந்த பிக் பாஸ் விதி, ஆனால் தப்பி தவறி இந்த விதியை மீறினால் என்ன வேணாலும் சொல்லுவேன் என்று எச்சரிக்கிறார் ரவீந்திரன். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண்களுக்கு ரவீந்திரனை பார்த்து ஒரு பயம்.

இதனைத் தொடர்ந்து ஒரு வழியாக நாங்கள் உப்பு தருகிறோம் என்று பெண்கள் அணியினர் ஒரு வழியா உப்பு தருகிறார்கள். அடுத்து முத்துக்குமரனும் ஜாக்லினும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜெப்ரி இடையில் வந்து அக்கா தோசை ரெடி வாங்க சாப்பிடலாம் என ஜாக்ளினை அழைக்கிறார்.அதற்கு முத்துக்குமரன் இருப்பா நாங்க பேசிகிட்டு இருக்கோம்ல என்கிறார்.

அதுக்கு நான் உங்களிடமா பேசுகிறேன். நான் எங்க அக்காவிடம் தான் பேசுகிறேன் என்கிறார் ஜெப்ரி. அதற்கு முத்துக்குமரன் சரிப்பா நாங்க பேசிட்டு இருக்கோம் இல்ல என்கின்றார். பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் எங்க அக்கா சொல்லட்டும் நீங்க எதுக்கு சொல்றீங்க, நான் உங்களிடம் பேசவில்லை என்கிறார். இப்படி முத்துக்குமார் சிரித்துக்கொண்டே சண்டையிட ஜெப்ரி கோபத்தில் சண்டையிட மொத்தத்தில் பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களை கன்டென்ட் இல்லாமல் காண்டாக்கி கொண்டிருக்கிறார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here