தலையே சுத்துதே… ஒரு நாள் சம்பளம் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் விசித்ராவுக்கு எவ்வளவு தெரியுமா.?

0
Follow on Google News

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து அதிகமான சண்டை சச்சரவுகள் தான் இருக்கிறது என்பது பலருடைய கருத்து. அதிலும் ரசிகர்களை விடவும் இந்த சீசனில் போட்டியாளர்கள் இடம் பிக் பாஸ் மாட்டிக்கொண்டு முழிப்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். சில தினங்களுக்கு முன்பு டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்ற போது கூட சிலர் தங்களுக்குள் பேசி வைத்து செய்த ஏமாற்று வேலையால் பிக் பாஸ் கோபமாக இருந்தார்.

அதை தொடர்ந்து போட்டியாளர்கள் ஏதாவது கண்டண்ட் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று பிக் பாஸ் புதியதாக யோசித்து டாஸ்க் கொடுக்கிறார். ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அதை சொதப்பி வைத்து விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷன் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியுள்ளது. அதற்கு காரணம், வெறும் மூன்று பேர் மட்டுமே நாமினேட் ஆகியுள்ளது தான்.

இந்த சீசனின் டைட்டில் வின்னர் நான் தான் என சுற்றி வரும் விக்ரம், அதிக மக்கள் ஓட்டுக்களை கருத்து கணிப்புகளில் பெற்று வரும் விசித்ரா மற்றும் மணியுடன் ஒட்டித் திரிந்துக் கொண்டிருக்கும் ரவீனா உள்ளிட்ட மூவர் மட்டுமே இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்றால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும் அளவுக்குத்தான் நாமினேஷன் உள்ளது. அதன்படி பார்த்தால், விசித்ரா அதிக ஓட்டுகள் உடன் முதலில் சேவ் ஆவார் என்றும் அடுத்து ரவீனா காப்பாற்றப்பட்டு விக்ரம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் எனத் தெரிகிறது.

ஆனால், இந்த வாரமும் எலிமினேஷன் பயங்கர ட்விஸ்ட் இருக்கும் என்றும் விக்ரமுக்கு பதில் இன்னொரு போட்டியாளரை வெளியேற்றவே இந்த ஸ்கெட்ச் போடப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கணிக்கத் தொடங்கி வருகின்றனர். எப்படி இருந்தாலும் வரும் சனிக்கிழமை பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்ததும் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.

விசித்ரா தான் பிக்பாஸ் இல்லத்திற்குள் இருக்கும் போட்டியாளர்களுள் அதிக வயதுடையவர். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருடனும் சண்டை போட்டு வம்பு வளர்த்தாலும் பின்னர் அம்மா செண்டிமெண்டால் அனைவரையும் தாக்கி விடுகிறார். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் “ஏண்டா இங்க வந்தோம்..” என்று துக்கத்தில் இருந்த இவர், அடுத்த வாரமே அதிரடி காட்டி போட்டியில் அனைவரையும் தூக்கிப்பாேட்டு மிதித்தார்.

நடிகை விசித்ரா, முன்னர் கவர்ச்சி நடிகையாக இருந்தார். 2000ம் ஆண்டிற்கு பிறகு, திரையுலகை விட்டு விலகியிருந்த விசித்ரா அதற்கான காரணம் என்ன என்று பிக்பாஸின் ‘பூகம்பம்’ டாஸ்கில் மனம் திறந்தார். அப்போது, ஒரு பிரபல நடிகர் அவரது ஆசைக்கு இணங்காததால் தன்னை படக்குழுவினரை வைத்து துன்புருத்தியதாகவும், இதனால் தான் பெரிதாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதுதான் சினிமாவில் இருந்து விலகியிருக்க காரணம் என்றும் தெரிவித்தார்.

கடந்த வாரம், பிக்பாஸில் திறமையை வெளிக்காட்டும் டாஸ்க் நடைப்பெற்றது. இதில் விசித்ரா ஆடும் போது “என் பேரு மீனாக்குமாரி” பாடல் போடப்பட்டது. இதில் கொஞ்சமாக ஆடிய விசித்ரா, பின்னர் சரவண விக்ரமிடம் தனக்கு அப்படி போடப்பட்ட பாடல் பிடிக்கவில்லை என்றும் இந்த இமேஜை உடைக்க வேண்டும் என்று இவ்வளவு தூரம் வந்து விட்டு, இப்படி மீண்டும் அதே போன்ற பாணிக்கு செல்வது போல உள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கடுத்த வீக் எண்ட் எபிசோடில் அதற்கான விளக்கத்தை கொடுத்தார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் மக்களை ஓரளவிற்காவது போர் அடிக்காமல் பார்த்துக்கொள்பவர்களுள் ஒருவர், விசித்ரா. இவரால் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டாலும், அது மீண்டும் இவராலேயே தீர்ந்து விடும். இதனால், இவர் பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்களாக தாக்குப்பிடித்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட விசித்ரா, ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம். மக்களின் ஆதரவை பெரும்பாலும் பெற்றுள்ள போட்டியாளர்களுள் இவர் உள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.