ஜிபி முத்து உணர்வுகளில் விளையாடிய விஜய் டிவி.. தனக்கு தானே ஆப்பு வைத்து பல கோடி இழந்த பரிதாபம்..!

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கலில் அந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் உணர்வுகளை தூண்டி அவர்கள் அழும் காட்சிகளை வைத்து அந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதன் மூலம், விஜய் தொலைக்காட்சியின் நிர்வாகம் பல கோடி சம்பாதிக்கும் இந்த பார்முலாவை தொடர்ந்து செய்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் தப்பி தவறி கூட அழுது விடக்கூடாது, அப்படி அழுதுவிட்டால் அந்த அழுகும் காட்சியை ப்ரோமோஷன் செய்து அந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி, அடுத்தவர் உணர்ச்சிகள் மூலம் கல்லா கட்டி விடுவார்கள் என்கிற விமர்சனம் விஜய் டிவி மீது உண்டு. அதே நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் உணர்வுகளை தூண்டி அழ வைக்கும் வித்தைகளில் கை தேர்த்தவர்கள் விஜய் டிவியில் நிர்வாகத்தினர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் டிக் டாக் புகழ் ஜி.பி முத்துவின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் பல கோடி சம்பாதிக்க நினைத்து தனக்குத் தானே விஜய் டிவி ஆப்பு வைத்துக் கொண்ட சம்பவம் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்கு சமீப காலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6ல் ஜி பி முத்து போட்டியாளராக பங்கேற்ற பின்பு அந்த நிகழ்ச்சி மிக பெரிய வரவேற்பை பெற்றது.

பிக் பாஸ் சீசன் 1 தவிர மற்ற அணைத்து சீசன்களும் படுதோல்வியை தழுவிய நிலையில், பிக் பாஸ் சீசன் 6 மட்டும் ஜிபி முத்து தயவினால் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நேரத்தில் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருந்த சமயத்தில், அவர் மகனுக்கு லேசான உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்த தகவலை ஜிபி முத்துவிடம் தெரிவிப்பதால், அவர் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியமால் கதறி அழுவார், மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் அவருக்கு பணம் கிடைக்கும் என்பதால் வீட்டை விட்டு வெளியில் வருவதர்க்கு ஜிபி முத்து விரும்ப மாட்டார்.

உங்கள் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற தகவலை தெரிவித்து, ஜிபி முத்து தன் மகனை பார்க்க முடியாமல் அவர் படும் வேதனைகள், மகன் மீது வைத்துள்ள பாசத்தில் அவர் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரையும் வைத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து பெரும் பணத்தை சம்பாரித்து விடலாம் என்கிற திட்டத்துடன், பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்த ஜிபி முத்துவிடம், அவர் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற தகவலை தெரிவித்துள்ளது விஜய் டிவி நிர்வாகம்.

ஆனால் இந்த தகவலை அறிந்த ஜிபி முத்து இனி எத்தனை கோடி கொடுத்தாலும் இங்கே இருக்க மாட்டேன். உடனே எனது மகனை பார்த்தே ஆக வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதில் உறுதியாக இருந்துள்ளார். ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் நிகச்சிக்கான டிஆர்பி ரேட்டிங் குறைந்துவிடும் என்பதால், அவரிடம் உங்கள் மகனுக்கு சிறிய காய்ச்சல் தான் என சமாதனம் பேசி பிக் பாஸ் வீட்டில் இருக்க வைக்க விஜய் டிவி நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.

ஆனால், எனக்கு பணம் முக்கியம் இல்லை, என்னுடைய குடும்பத்தை உடனே பார்க்க வேண்டும் என
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். மற்றவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்கள் அழுகும் காட்சிகளை வைத்து பணம் சம்பாரித்து, பிறர் உணர்வுகளில் இதுவரை விளையாடி வந்த விஜய் டிவியின் தில்லாலங்கடி வேலை ஜிபி முத்துவிடம் தோல்வியை தழுவியுள்ள நிலையில், ஜிபி முத்து விவகாரத்தில் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டது விஜய் டிவி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.