என்னிடம் தவறாக நடந்த பிரபல நடிகர் இவர்தான்… போட்டு உடைத்த விசித்திரா…

0
Follow on Google News

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அதிகமான சர்ச்சைகளை சந்தித்து வந்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்தே கடைசி நாள் வரைக்கும் சண்டை சச்சரவுகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரும் செய்யாத சாதனையை நடிகை விசித்ரா செய்திருந்தார். காரணம் வயது அதிகமாக இருந்த விசித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்த பெருமையை பெற்றிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் விசித்திரா மற்றும் அர்ச்சனா ஆகியோர் விளையாடும் முறையும்; அவர்கள் செய்யும் செயலும் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக விசித்திரா ஒவ்வொரு நாளும் கண்ட்டெண்ட் கொடுத்தார். அதிலும் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் தினேஷுக்கு ஆதரவாக விசித்ரா இருந்தார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு கூடியது. ஆனால், கடைசி சில வாரங்களில் இவர் ஆனால், கேங்குடன் சேர்ந்து தினேஷ் அர்ச்சனாவிற்கு எதிராக திரும்பினார்.

அதுவே இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வயதில் அதிகமான போட்டியாளர்கள் தான் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்படுவார்கள். ஆனால் விசித்திரா உள்ளே இளைஞர்களோடு போட்டி போட்டு 90 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தார். அதோடு அதிகமான ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார். மேலும் அவர் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது அவருக்கு நடந்த அநியாயம் பற்றி கூறி இருப்பர்.

அதாவது, தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அந்த ஹீரோ தன்னைப் பார்த்த உடனேயே பெயரை கூட கேட்காமல் ‘கம் டு மை ரூம்’ என அறைக்கு அழைத்ததாகவும், அடுத்த நாள் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைப் பற்றி சொன்னபோது ஸ்டன்ட் மாஸ்டர் தன்னை கன்னத்தில் அறைந்தது பற்றியும் கண்ணீர் மல்க பேசினார். இதனால்தான், தான் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகியதாகவும் அவர் கூறினார். அவர் கூறியது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளானது.

விசித்ரா பேசுகையில் தன்னை அறைக்கு அழைத்த நடிகர் பெயரும், கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயரும் ம்யூட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் விசித்ராவை அறைக்கு அழைத்தது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், அவரை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயர் ஏ.விஜய் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். கடந்த 2001-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் பலேவடிவய்யா பாசு. இந்தப்படத்தில் நடிக்கும்போது தான் விசித்ராவுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கருத்துகளை பரப்பினர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக பேட்டி ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு விசித்திரா பதில் அளித்து இருக்கிறார். அதில், “நான் பிக்பாஸில் சொன்னது மில்லியன் கணக்கான மக்களுக்கு செல்ல வேண்டும் என்று தான். அது பலருக்கு உத்வேகமாக இருந்து இருக்கும். நான் யார் பெயரையுமே சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அக்குவேறாக தகவலை எடுத்துவிட்டனர். அவர்கள் எடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் பெயர்கள் எதையும் குறிப்பிடவில்லை

அது நிஜமான விஷயம் தான். என்னுடைய வாழ்க்கையில் இன்னும் கருப்பு புள்ளியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ” பிக் பாஸில் இருந்து அவள் வெளியே போன போது கூட அனைவரும் நீங்கள் fake என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் அப்படி கிடையாது நீங்கள் எப்படி நீங்கள் அப்படியே இருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றவன் வெளியே சென்றதும் சோசியல் மீடியாவை பார்த்து அப்படியே மாறிவிட்டாள்.

அவள் எனக்கு பொண்ணு மாதிரி தான். இப்போதும் அவள் மீது எனக்கு எந்த வித வெறுப்பும் கிடையாது. டைட்டில் வென்று விடுவோம் என்று ஆசையோடு வந்த வென்று வெளியேறியது அவளுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதே போல வனிதாவும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் இரண்டு முறை பிக்பாஸிற்கு வந்திருக்கிறார் பிக் பாஸில் எதுவும் நம்ம கையில் இல்லை என்பதை அவரைவிட வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது” என்றார்.